கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய பலி 13 ஆக அதிகரிப்பு! எஸ்.பி. சஸ்பெண்டு... கலெக்டர் பணியிடை மாற்றம்! சிபிசிஐடி விசாரிக்க உத்தரவு!

ம.பா.கெஜராஜ்,
கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் விற்பனை நீண்ட காலமாக விற்பனை செய்யப்பட்டு வருகிறது. அப்படியிருக்க இன்று சாராயம் அருந்தியதால் 10 பேர்ர் பலியாகியிருக்கிறார்கள். 30 க்கும் மேற்பட்டவர்கள் சிகிச்சைக்காக மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளார்கள். அவர்களின் ரத்த மாதிரிகளை சேகரித்து விழுப்புரம் அரசு மருத்துவமனைக்கு ஆய்வுக்காக அனுப்பிவைக்கப்பட்டுள்ளது. 10-க்கும் மேற்பட்டவர்கள் மேல் சிகிச்சைக்காக புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இது தொடர்பாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சஸ்பெண்டு செய்யப்பட்டிருக்கிறார். அதே போல் மாவட்ட ஆட்சியர் பணியிடைமாற்றம் செய்யப்பட்டிருக்கிறார்.
கள்ளக்குறிச்சி நகராட்சிக்குட்பட்ட கருணாபுரம் பகுதியில் கள்ளச்சாராயம் விற்பனை செய்யப்பட்டதாக கூறப்படுகிறது. கள்ளச்சாராயம் அருந்தியவர்கள் நேற்று இரவு உடல் நலம் பாதிக்கப்பட்டு கள்ளக்குறிச்சி தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதில், கணேசன் மகன் பிரவீன்(29), தர்மன் மகன் சுரேஷ்(46), மண்ணாங்கட்டி மகன் சுரேஷ்(45), கந்தன் மகன் சேகர்(61) ஆகியோர் உயிரிழந்தனர். இதையடுத்து மேலும் பலர் உடல்நலம் பாதிக்கப்பட்டு தனியார் மருத்துவமனை மற்றும் கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர்.
மேலும், 27 பேர் கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர். இந்த நிலையில், அப்பகுதியில் கள்ளச்சாராயம் விற்பனை செய்ததாக கன்னுக்குட்டி என்ற கோவிந்தராஜ் என்பவரை கள்ளக்குறிச்சி போலீஸார் அழைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கள்ளச்சாராயம் செவ்வாய்க்கிழமை பிற்பகல் முதல் புதன்கிழமை அதிகாலை வரை விற்பனை செய்யப்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. செவ்வாய்க்கிழமை பகலில் கள்ளச்சாராயம் அருந்தியவர்கள் இரவு பாதிப்புக்குள்ளாகி இன்று உயிரிழந்துள்ளனர்.
தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் ஷ்ரவன்குமார்,எஸ்பி சமய்சிங் மீனா மற்றும் ரிஷிவந்தியம் எம்எல்ஏ வசந்தம் கார்த்திக்கேயன் உள்ளிட்டோர் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வருவோரை சந்தித்து ஆறுதல் கூறினர். இதையடுத்து ஆட்சியர் செய்தியாளர்களிடம் கூறுகையில், "கள்ளச்சாராயம் அருந்தி உயிரிழந்ததாக தவறான தகவல் பரப்பபடுகிறது.
3 பேர் கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் இறக்கவில்லை. பிரவீன் என்பவர் வயிற்றுப் போக்கு காரணமாக தனியார் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வீடு திரும்பியுள்ளார்.
மேலும் இருவரில் ஒருவர் வயதான காரணத்தினாலும், மற்றொருவர் வலிப்பு நோயாலும் உயிரிழந்துள்ளனர். இவர்கள் 3 பேரும் தனியார் மருத்துவமனையில் உயிரிழந்துள்ளனர். இவர்கள் மூவரும் கள்ளச்சாராயம் அருந்தி உயிரிழந்ததை உறுதிப்படுத்த இயலாது என்று சொன்னார்.
மருத்துவர் ராமதாசு,
ஆட்சியர் சொல்வது பச்சை பொய் என்று பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாசு அறிக்கை வெளியிட்டுள்ளார்.
எடப்பாடி பழனிச்சாமி,
அதே போல் எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி கள்ளக்குறிச்சி சம்பவம் தொடர்பாக வெளியிட்டுள்ள பதிவில், "கள்ளக்குறிச்சி மாவட்டம் கருணாபுரம் பகுதியில் கள்ளச்சாராயம் அருந்திய 5 பேர் உயிரிழந்ததாகவும் 10க்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருவதாகவும் வருகின்ற செய்திகள் கவலையளிக்கின்றன. உயிரிழந்தோர் குடும்பத்தாருக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும் , வருத்தங்களையும் தெரிவித்துக்கொள்கிறேன்.
திமுக ஆட்சியில் கள்ளச்சாராயம் ஆறாய் ஓடுவதை தொடர்ச்சியாக நான் சுட்டிக்காட்டி வந்தும், இதனால் ஏற்கனவே பல உயிரிழப்புகள் ஏற்பட்ட பிறகும் கூட கள்ளச்சாராயத்தை ஒழிக்க எவ்வித நடவடிக்கையும் எடுக்காத விடியா திமுக அரசுக்கு எனது கடும் கண்டனம்.
"கள்ளச்சாராயம் இல்லை- மெத்தனால்" என்று சொன்னது போல மக்கள் வாழ்க்கை விஷயத்தில் வார்த்தை விளையாட்டு விளையாடாமல், கள்ளச்சாராயத்திற்கு எந்த பெயர் இருந்தாலும் அதனை ஒழிக்க கடுமையான நடவடிக்கை எடுக்க முதல்வரை வலியுறுத்துகிறேன்." என்று தெரிவித்துள்ளார்.
செந்தில் குமார் எம்.எல்.ஏ.,
இந்த சம்பவம் குறித்து தகவலறிந்து மருத்துவமனைக்கு வந்த கள்ளக்குறிச்சி எம்எல்ஏ செந்தில்குமார், "கள்ளக்குறிச்சி நகரில் கஞ்சா விற்பனையும், கள்ளச்சாராயம் தடையின்றி நடைபெறுகிறது. தற்போது சிசிச்சைக்காக அனுமதிக்கப்பட்டவர்களின் நிலை பரிதாபமாக உள்ளது.
மாவட்ட ஆட்சியர் வயிற்றுப் போக்கால் உயிரிழந்ததாகக் கூறுவதெல்லாம் ஏற்புடையது அல்ல.அரசு உடனடியாக உயிரிழந்தவர்களின் குடும்பத்துக்கு ரூ.25 லட்சம் நிவாரணம் அளிக்கவேண்டும். கள்ளச்சாராயத்தை முற்றிலுமாக ஒழிக்க வேண்டும்" என்று அவர் கூறினார்.
எஸ்.பி.,சஸபெண்ட்
இந்நிலையில் கள்ளச்சாராய பலி விவகாரத்தில் கலெக்டர்ஷ்ரவன்குமார்பணியிடமாற்றம் செய்யப்பட்டார். அவருக்கு பதிலாக எம்.எஸ் பிரசாந்த் என்பவர் மாவட்ட கலெக்டராக நியமிக்கப்பட்டு உள்ளதாக தமிழக அரசு தெரிவித்து உள்ளது. மேலும் மாவட்ட எஸ்.பி., சமயங்சிங்மீனாவை சஸ்பெண்ட் செய்யப்பட்டு தமிழக அரசு உத்தரவிட்டு உ்ளளது.மாவ்டட எஸ்பியாக ரஜத்சதுர்வேதி நியமிக்கப்பட்டு இருப்பதாகவும் தெரிவிக்ப்பட்டு உள்ளது.
இவ்விவகாரம் தொடர்பாக மதுவிலக்கு அமாலக்கப்பிரிவு துணை கண்காணி்ப்பாளர் தமிழ்ச்செல்வன் சஸபெண்ட் செய்யப்பட்டு உள்ளார். தொடர்ந்து மதுவிலக்குபிரிவை சேர்ந்த கவிதா , பாண்டி செல்வி , பாரதி ஆனந்தன், ஷிவ்சந்திரன் மற்றும் காவல் உதவி ஆய்வாளர்கள் பாஸ்கரன், மனோஜ் ஒன்பது பேர் சஸ்பெண்ட் செய்யப்பட்டு உள்ளனர்.மேலும் இவ்விவகாரத்தை தீர விசாரிக்கவும் மேல் நடவடிக்கைக்காகவும் தமிழக அரசு சிபிசிஐடி வசம் ஒப்படைத்து உள்ளதாக முதல்வர் ஸ்டாலின் தெரிவித்து உள்ளார்.
சிறப்பு மருத்துவ குழுக்கள் விரைவு
விழுப்புரம் மருத்துவக்கல்லூரியை சேர்ந்த 4 சிறப்பு மருத்துவ குழுக்கள் கள்ளச்சராயம் விபத்து நிகழ்ந்த் பகுதிக்கு விரைந்துளளனர். மேலும் சேலம் திருவண்ணாமலையில் இருந்தும் சிறப்பு மருத்துவகுழுக்கள் கள்ளக்குறிச்ச்சி பகுதிக்கு அனுப்பி வைக்கப்பட்டு இருப்பதாகவும் அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. மேலும் 12 அவசர கால ஊர்திகள் கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனை முன்பு தயார் நிலையில் வைக்கப்பட்டு உள்ளது. தொடர்ந்து அவசர கால சிகிசசை மருந்துள் சேலம் திருவண்ணாமலை அரசு மருத்துவமனைகளுக்குஅனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் கள்ளச்சாராய விற்பனையை தடுக்க தவறிய கள்ளக்குறிச்சி மாவட்ட எஸ்.பி.சமயசிங் மீனாவை தமிழக அரசு சஸ்பெண்டு செய்துள்ளது. அதே போல் மாவட்ட ஆட்சியர் ஷரவப்குமார் பணியிடமாற்றம் செய்யப்பட்டு அவருக்கு பதிலாக எம்.எஸ்.பிரசாத் என்பவரை கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியராக நியமித்துள்ளது தமிழக அரசு
நாளை தமிழக சட்டப்பேரவை கூட உள்ள நிலையில் இன்று கள்ளச்சாராய சாவு ஏற்பட்டுள்ளதற்கு பலரும் கண்டனம் தெரிவிக்கின்றனர்.