இறைச்சி கலந்து வந்த குடிதண்ணீர்! சம்மந்தப்பட்டவர்கள் அலட்சியம்!

  இறைச்சி கலந்து வந்த குடிதண்ணீர்! சம்மந்தப்பட்டவர்கள் அலட்சியம்!

  கு.அசோக்,

 கிராமத்தின் மேல்நிலை நீர்த்தக்க தொட்டியில் இருந்து பொதுமக்களுக்கு விநியோகிக்கப்படும் குடிநீரில் இறைச்சி கழிவுகள் கலந்து வந்ததால் பரபரப்பு.

திருப்பத்தூர் மாவட்டம்,  முத்தானூர் பகுதியில் சுமார் 150-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன.ஜங்கு

சுமார் ஐந்து வருடங்களுக்கு முன்பு அப்பகுதி மக்களுக்கு குடிநீர் வினோகிப்பதற்காக மேல்நிலை நீர் தேக்க தொட்டி கட்டப்பட்டுள்ளது.

   அந்த மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியில் குறிப்பிட்ட கால இடைவெளியில் சுத்தம் செய்வதற்காக கட்டப்பட்டுள்ள இரும்பு படிக்கட்டுகள் துருப்பிடித்து உடைந்து இருப்பதால் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியில் சுத்தம் செய்வதற்கான வாய்ப்பு இல்லாமல் போனது.

 இருந்தாலும் அதே நிலையில், அந்த தண்ணீர் சுத்தம் செய்யப்படாமல் அப்படியே பொதுமக்களுக்கு விநியோகிக்கப்பட்டு வருவதாக தெரிகிறது.

  இந்நிலையில் இன்று அந்த பகுதி மக்களுக்கு விநியோகிக்கப்பட்ட குடிநீரில் கோழி இறைச்சி மற்றும் இறகுகள், அணில் முடி, உள்ளிட்டவை கலந்து வந்ததால் தண்ணீர் கலங்கலாகவும் துர்நாற்றம் வீசியும் வந்தது.

  இதனைத் தொடர்ந்து அந்த ஊராட்சி மன்ற தலைவருக்கும் வார்டு நம்பருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டும் எந்த நடவடிக்கையும் எடுக்காமல் கடந்து சென்றுள்ளனர்.

  அதுமட்டுமின்றி அந்த மேல்நிலை நீர்த்தக்க தொட்டி ஆப்ரேட்டரிடம் இதுகுறித்து அப்பகுதி மக்கள் கேள்வி கேட்டதற்கு, பஞ்சாயத்து தலைவரின் பெயர் கெட்டுப்போக கூடாது நிருபர்கள் வீடியோ எடுக்க வந்துள்ளார்கள் அதன் காரணமாக தற்போது தற்போது பீளிச்சிங் பவுடர் கொடுத்து உள்ளனர். அதன் காரணமாக தற்போது கொட்டி வருகிறேன் என்று சமாளித்திருக்கிறார்.

 ஆகவே அசுத்தமாக உள்ள மேல்நிலை நீர்த்தக தொட்டியை உடனடியாக துறை சார்ந்த அதிகாரிகள் சுத்தம் செய்து உடல் நல சீர்கேடு ஏற்படுவதற்கு முன்னர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்தனர்.