விலங்குகளை கொல்ல கன்னி வெடி! இருவர் கைது!

ஜி.கே.சேகரன்,
ஆம்பூர் அருகே அனுமதியின்றி நிலத்தில் நாட்டு துப்பாக்கி பதுக்கி வைத்திருந்த இருவர் கைது, அவர்களிடமிருந்து நாட்டு துப்பாக்கி பறிமுதல் செய்து உமராபாத் போலீசார் நடவடிக்கை -வனவிலங்குகளை வேட்டையாட வைக்கப்பட்ட நாட்டு வெடிகுண்டு வெடித்து பசுமாடு வாய் மற்றும் தாடை கிழிந்த வழக்கிலும் தொடர்பு என தகவல்.
திருப்பத்தூர் மாவட்டம், ஆம்பூர் அடுத்த வெங்கடசமுத்திரம் ஊராட்சிக்குட்பட்ட ராளகொத்தூர் பகுதியில் கடந்த ஒன்றாம் தேதி அதே பகுதியை சேர்ந்த கோவிந்தசாமி மஞ்சுளா தம்பதியினரின் பசுமாடு, ராமமூர்த்தி என்பவருக்கு சொந்தமான விவசாய நிலத்தில் மேய்ச்சலுக்கு விடப்பட்டிருந்தது.
அப்போது நாட்டு வெடிகுண்டு வெடித்து பசுமாட்டின் வாய் மற்றும் தாடை பகுதி கிழிந்து உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்தது.
இந்த வழக்கில் உமராபாத் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்த நிலையில் குப்புராஜாபாளையம் பகுதியை சேர்ந்த சதீஷ் (24) மற்றும் அங்கியாபள்ளி பகுதியை சேர்ந்த சீனிவாசன் ஆகிய இருவரை கைது செய்து தீவிர விசாரணை மேற்கொண்டனர்.
அவர்கள், வனவிலங்குகளை வேட்டையாட கன்னி வெடிகுண்டு பயன்படுத்தியிருக்கிறார்கள். அது வெடித்து மேய்ச்சலுக்கு விடப்பட்டிருந்த பசுமாடு வாய் மற்றும் தாடை கிழிந்தது தெரியவந்தது. மேலும் விவசாய நிலத்தில் அனுமதியின்றி நாட்டு துப்பாக்கி பதுக்கி வைத்து வனவிலங்குகளைவேட்டையாடி வருவது தெரியவந்தது.
மேலும் இது தொடர்பாக இருவர் மீதும் மூன்று பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டு வேலூர் மத்திய சிறையில் அடைத்தனர்.