வேறு பெண்ணுக்கு முத்தம் கொடுக்க முயன்ற ஜோ பைடன்! தேர்தல் போட்டியிலிருந்து விலகி கமலா ஹாரிஸை அறிவித்தார்!

வேறு பெண்ணுக்கு முத்தம் கொடுக்க முயன்ற ஜோ பைடன்! தேர்தல் போட்டியிலிருந்து விலகி கமலா ஹாரிஸை அறிவித்தார்!

நரேஷ்.என்,

 ஜோ பைடன் அமெரிக்க அதிபர் தேர்தல் போட்டியிலிருந்து விலகுவதாக அறிவித்துள்ளார். ஜனநாயக கட்சியின் நலனுக்காகவும் நாட்டின் நலனுக்காகவும் இந்த முடிவை எடுத்துள்ளதாக அவர் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். மேலும், ஜனநாயக கட்சியின் அதிபர் வேட்பாளராக துணை அதிபர் கமலா ஹாரிஸை முன்மொழிந்தார்.

 அமெரிக்க அதிபர் தேர்தல் நவம்பர் 5ஆம் தேதி நடைபெற உள்ளது. அதற்கு முன்பாகவே இந்த தேர்தல் குறித்த பரபரப்பு உலக நாடுகள் வரை எதிரொலிக்கிறது.

 குடியரசு கட்சிக்கும், ஜனநாயக கட்சிக்கும் இடையே தான் போட்டி.  கடந்த 19ஆம் தேதி குடியரசு கட்சியின் தேசிய மாநாடு நடைபெற்றது. இதில் குடியரசு கட்சியின் அதிகாரப்பூர்வ அதிபர் வேட்பாளராக டொனால்டு டிரம்ப் அறிவிக்கப்பட்டார்.

 எதிரணியில் ஜனநாயக கட்சி வேட்பாளராக தற்போதைய அதிபர் ஜோ பைடன் மீண்டும் களம் இறங்கினார். 81 வயதான அவர் அதிபர் பதவிக்கு மீண்டும் போட்டியிடும் நிலையில் பல்வேறு விமர்சனங்களை எதிர்கொண்டு வந்தார்.

  ஜோ பைடனின் உடல்நிலை கடும் விமர்சனத்திற்கு உள்ளானது. டிரம்புடன் நடைபெற்ற நேரடி விவாதத்தில் பேசும் போது பைடன் மிகவும் தடுமாறினார். அதேபோல் செய்தியாளர்கள் சந்திப்பின்போது உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கியை புதின் என்றும், அமெரிக்க துணை அதிபர் கமலா ஹாரிஸை டிரம்ப் என்றும் தவறுதலாக கூறியதுடன், மனைவிக்கு முத்தம் கொடுப்பதற்கு பதில் தவறுதலாக அருகிலிருந்த பெண்ணுக்கு முத்தம் தர முயன்றார்.

 இவற்றை தொலைக்காட்சிகள் நேரடியாக ஒளிபரப்பு செய்தது. இந்நிலையில் இவை  டிரம்புக்கு சாதகமாக அமையும் என்பதால் ஜனநாயக கட்சியினரிடையே அதிருப்தி ஏற்பட்டது. ஏற்கனவே டிரம்ப்  மீது துப்பாக்கி சூடு நடத்தப்பட்ட சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்திய சூழலில், பைடனை அவருக்கு எதிராக மீண்டும் களமிறங்குவது குறித்து எதிரான கருத்துக்கள் கட்சிக்குள் எழுந்தன.

 மேலும் பைடனின் குடும்பமும் அவரை தேர்தலில் போட்டியிட வேண்டாம் என்று குறீயதன் பேரில் ஜோபைடன் தனது ட்விட்டர்  பக்கத்தில், தான் அமெரிக்க அதிபர் தேர்தலில் போட்டியிடவில்லை என அறிவித்தார்.

 அதில் கூறப்பட்டிருப்பதாவது, "எனது சக ஜனநாயகக் கட்சியினர் எனது வேட்புமனுவை ஏற்க வேண்டாம். எஞ்சியிருக்கும் எனது பதவிக் காலம் முழுவதும் அதிபராக எனது கடமைகளில் எனது முழு ஆற்றலையும் செலுத்தவும் முடிவு செய்துள்ளேன்.

  2020ஆம் ஆண்டு கட்சி வேட்பாளராக எனது முதல் முடிவு கமலா ஹாரிஸை துணைத் தலைவராக தேர்ந்தெடுத்ததுதான். அது நான் எடுத்த சிறந்த முடிவு. இந்த ஆண்டு எங்கள் கட்சியின் வேட்பாளராக கமலா வருவதற்கு எனது முழு ஆதரவையும் ஒப்புதலையும் இன்று வழங்க விரும்புகிறேன்.

  ஜனநாயகவாதிகள் - ஒன்று கூடி டிரம்பை தோற்கடிக்க வேண்டிய நேரம் இது. இதை செய்வே நான் தேர்தல் போட்டியிலிருந்து விலகுகிறேன் என்று அறிவித்துள்ளார்.

  இந்திய வம்சாவளி பெண்ணான கமலா ஹாரிஸ், கடந்த தேர்தலில் துணை அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்ட போது மகிழ்ந்த இந்தியர்கள் இம்முறை இரட்டிப்பு மகிழ்ச்சியை பெறுவார்களா என்பது நவம்பர் 5 ஆம் தேதிதான் தெரியவரும்.