அரசு பள்ளி மாணவர்களின் படிப்பு பாதியில் நிற்க கூடாது! வேலூர் ஆட்சியர்!

அரசு பள்ளி மாணவர்களின் படிப்பு பாதியில் நிற்க கூடாது! வேலூர் ஆட்சியர்!

கு.அசோக்,

 அரசு மாணவர்கள் பள்ளி படிப்புடன் நின்றுவிடாலம் உயர்கல்வியை பெற ஊக்குவிப்பதுடன் நான் முதல்வன் திட்டம் மூலம் கல்லூரி மாணவர்களுக்கு வேலைவாய்ப்பை பெறும் வகையில் பயிற்சிகளை அளிக்கிறது - வேலூர் வேலைவாய்ப்பு முகாமில் பணி ஆணைகளை வழங்கி மாவட்ட ஆட்சியர் சுப்பு லெட்சுமி பேச்சு.

 வேலூர் மாவட்டம், வேலூர் சாய்நாதபுரத்தில் உள்ள பெண்கள் கல்லூரியில் வேலைவாய்ப்பு அலுவலகம் மற்றும் ஊரக நகர்புற வாழ்வாதார இயக்கம் சார்பில் தனியார் துறை நிறுவனங்களில் வேலைவாய்ப்பு முகாமானது நடந்தது.

 இதில் நூற்றுக்கும் மேற்பட்ட தனியார் நிறுவனங்களும் 700-க்கும் மேற்பட்ட இளைஞர்களும் இளம் பெண்களும் கலந்துகொண்டனர்.

இந்த வேலைவாய்ப்பு முகாமினை மாவட்ட ஆட்சியர் வே.இரா.சுப்புலெட்சுமி குத்துவிளக்கேற்றி துவங்கி வைத்தார். இதில் வேலூர் சட்டமன்ற உறுப்பினர் கார்த்திகேயன், குடியாத்தம் சட்டமன்ற உறுப்பினர் அமுலு, மேயர் சுஜாதா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

  இளைஞர்களுக்கும், இளம் பெண்களுக்கும் பணி ஆணைகளை வழங்கி இவ்விழாவில் மாவட்ட ஆட்சியர் சுப்பு லெட்சுமி பேசுகையில் அரசு பள்ளி மாணவர்களின் படிப்பு பாதியில் நிற்க கூடாது என்பதற்காக உயர் கல்வியை ஊக்குவிக்கிறது மேலும் அதோடு மட்டுமில்லாமல் அவர்கள் கல்லூரியில் படிக்கும் போதே நான் முதல்வன் திட்டம் மூலம் அவர்களுக்கு பல பயிற்சிகளை வழங்கி அரசே அவர்களுக்கான வேலைவாய்ப்பை பெற்று தருகிறது என பேசினார்.