வாக்காளர்களுக்கு நன்றி சொன்னபோது அரிசி சரியில்லை என மக்கள் புகார்! சரிபடுத்திய அமைச்சர் துரைமுருகன்!

வாக்காளர்களுக்கு நன்றி சொன்னபோது அரிசி சரியில்லை என மக்கள் புகார்! சரிபடுத்திய அமைச்சர் துரைமுருகன்!

 ஜி.கே.சேகரன்,

 பொன்னை பகுதியில் நியாய விலைக்கடை அரிசி சரியில்லை என பொதுமக்கள் அமைச்சரிடம் புகார் - அமைச்சர் துரைமுருகன் உடனடியாக இதனை மாற்றி தர அதிகாரிகளுக்கு உத்தரவிட்டு பேசினார்

 வேலூர்மாவட்டம், அரக்கோணம் பாராளுமன்ற தொகுதிக்குட்பட்ட காட்பாடி சட்டமன்ற தொகுதியில் பொன்னை மற்றும் அதனை சுற்றியுள்ள கிராமங்களில் அரக்கோணம் பாராளுமன்ற உறுப்பினர் ஜெகத் ரட்சகன் நன்றி தெரிவித்தார்.

  அவருடன் தமிழக நீர் வளத்துறை துரைமுருகன் சென்றிருந்தார்.

  அப்போது பொன்னை பகுதியில் நியாயவிலைகடையில் வழங்கபடும் அரிசி தரமற்றதாக இருப்பதாக அமைச்சர் துரைமுருகனிடம் மக்கள் நேரடியாக புகார் தெரிவித்தனர்.  இதனை அடுத்து மக்கள் மத்தியில் பேசிய அமைச்சர் துரைமுருகன் உணவு வழங்கல் துறை அதிகாரிகள் தொடர்பு கொண்டு நீங்கள் கூறி புகார் குறித்து விசாரித்தேன் இனி அரிசி தரமானதாக வழங்கபடும் அதிகாரிகளுக்கு சொல்லியுள்ளேன் என்று சமாளித்தார்.

 பின்னர் அமைச்சர் துரைமுருகன் செய்தியாளர்களிடம் கூறுகையில் உதயநிதி ஸ்டாலினுக்கு துணை முதல்வர் பதவி வழங்கப் போவதாக பேசப்பட்டு வருவதாக  கேள்விக்கு, அங்கெங்கில்லாமல் எங்கும் இது ஒலித்து வருகிறது. இதை முடிவெடுக்க வேண்டியவர் முதல்வர். 

  ¢உதயநிதி ஸ்டாலின் துணை முதல்வராக தேர்ந்தெடுக்கப்பட்டால் உங்களுடைய நிலைப்பாடு என்ன என்ற கேள்விக்கு, உதயநிதி ஸ்டாலின் முறையாக கட்சியில் வளர்ந்தவர் கட்சியின் சட்ட திட்டங்களுக்கு உட்பட்டவர்.

 ¢என்னுடைய தனிப்பட்ட மரியாதையை விட கட்சியினுடைய நோக்கு பலம் ஆகியவற்றை நான் எதிர்பார்ப்பவன். காரணம் நான் என்னுடைய வாழ்க்கையில் அறுபது ஆண்டுகளை கட்சிக்காகவே அர்ப்பணித்தவன்.

  எனவே என் வளர்ச்சி என் குடும்ப நிகழ்ச்சிகளை விட கட்சியை நான் பெரிதாக கருதுகிறேன். சென்னையை சுற்றியுள்ள பகுதிகளில் நீர்வடி பகுதிகளை மழைகாலம் என்பதால் சீர்படுத்தியுள்ளோம் திருநெல்வேலி போன்ற பெருமழையால் பாதிக்கப்பட்ட இடங்களில் தற்காலிக தீர்வு நடவடிக்கை நிரந்தர நடவடிக்கையையும் எடுத்து வருகிறோம் என சொன்னார்.