வேலூரில் தொடங்கிய கொலை திட்டம்!

வேலூரில் தொடங்கிய கொலை திட்டம்!

ஆ.ஜோ,

 ஆம்ஸ்ட்ராங் கொலைவழக்கு தொடர்பாக  ஆற்காடு சுரேஷின் காதலி என்று கருதப்படும் அஞ்சலை என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார். அவரைத் தொடர்ந்து மேலும் இரண்டு ரவுடிகளை பிடித்ததாகவும், சென்னை ஐஸ் ஹவுஸை சேர்ந்த எல்லப்பன் என்ற ரவுடியிடம் போலீசார் விசாரணை நடத்தி வருவதாகவும் தகவல்கள் வெளியாகியிருக்கின்றன.

 இந்த எல்லப்பன், சிறைவாசிகளுக்கு வெளியில் இருந்து பண உதவி, சிறைவாசிகளிடம் இருந்து வெளியில் தகவல்களை  கூறுபவராக செயல்பட்டதாக கூறப்படுகிறது.

  அதே போல் ஆம்ஸ்ட்ராங்கை கொலை செய்ய கோடாரி ஒன்றை வாங்கியதும், அதனை ஆம்ஸ்ட்ராங்கை கொலை செய்ய பயன்படுத்தியதும் தெரிய வந்துள்ளது. முதல் திட்டம் வேலூரில் இருந்து தொடங்கியதாகவும் சொல்லப்படுகிரது.      அந்த வகையில், வேலூரில் வைத்து அருள், பொன்னை பாலுவை மூளை சலவை செய்துள்ளார். அதற்காக பாலு, தங்க பிரேஸ்லெட்டை வைத்து ரூ.3.50 லட்சம்  பணமாக்கியுள்ளார்.

  மேலும் சம்போ செந்தில் இன்ஸ்டாகிராம் மூலமாக ஹரிஹரனுக்கு உத்தரவுகளை பிறப்பித்துள்ளார் எனவும், ஆம்ஸ்ட்ராங் கொலையில் மேலும் பத்து ரவுடிகள் சம்மந்தப்பட்டிருப்பதாக அஞ்சலை வாக்கு மூலம் அளித்ததாகவும் சில தகவல்கள் வெளியாகியிருக்கின்றன.