டிவிஎஸ் நிறுவனம் பணியாளர்களை பழி வாங்குகிறதா?

கு.அசோக்,
சோளிங்கர் தாலுக்கா டிவிஎஸ் பிரேக்ஸ் இந்தியா பவுண்டரி டிவிஷனில் சுமார் 17 ஆண்டுகளுக்கும் மேலாக பணியாற்றி வந்த 60க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் நிறுவனத்தின் நுழைவு வாயில் வெளியே அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இராணிப்பேட்டைமாவட்டம்,சோளிங்கரில் உள்ள தனியார் தொழிற்சாலையான டிவி.எ.ஸ். பிரேக்ஸ் இந்தியா பவுண்டரி டிவிஷனில் தொழிலாளர்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டனர். தகவல் அறிந்து தொழிற்சங்க தலைவர் ரகுபதி தொழிலாளர்களை நேரில் சந்தித்து பேசினார்.
அப்போது நிறுவனத்தில் பணியாற்றிய தொழிலாளர்கள் கூறுகையில், சோளிங்கர் டிவிஎஸ் பிரேக்ஸ் இந்தியா பண்டரி டிவிஷனில் சுமார் 17 ஆண்டுகளுக்கும் மேலாக நிறுவனத்தின் வளர்ச்சிக்காக பர்னஸ் அருகே நின்று பணி செய்து வந்தோம்.
10 ஆண்டுகள் பணியாற்றிய தொழிலாளர்களை நிரந்தரப்படுத்துவதாக ஒப்பந்தம் செய்திருந்த நிலையில் தற்போது அது தொடர்பாக பேசிய காரணத்திற்காக தொழிலாளர்களை வேறு ஒரு நிறுவனத்திற்கு வேறு மாநிலத்திற்கு பணியிட மாற்றம் செய்வதாக கூறி மிரட்டி வருகிறார்கள்.
மேலும் தொழிலாளர்களை நிரந்தரபடுத்துவதாக கூறி ஒப்பந்ததாரர்கள் ரூபாய் 50,000 /- லஞ்சமாக முன் பணம் வாங்கியதாக கூறப்படுகிறது.
தற்போது வேலையில்லை என்று சொல்லி பணிமருத்து வருகிறார்கள். எனவே சோளிங்கர் டிவிஎஸ் பிரேக்ஸ் இந்தியா பண்டரி டிவிஷனில் சுமார் 17 ஆண்டுகளுக்கு மேலாக நிறுவனத்தின் வளர்ச்சிக்காக பணியாற்றிய தொழிலாளர்களை பழிவாங்கும் போக்கை கைவிட்டு நிரந்தர படுத்த வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து கோஷங்களை எழுப்பி நுழைவு வாயில் முன்பு அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.