ஏரி வறண்டதால் மீன்கள் செத்து மிதந்தன!

ஜி.கே.சேகரன்,
கடும் வெயிலால் ஏரியில் நீர் வற்றி செத்து மிதந்த பல்லாயிரக்கணக்கான மீன்கள்.
திருப்பத்தூர் மாவட்டத்தில் கடந்த சில தினங்களாக 100 டிகிரிக்கும் மேல் வெயில் வாட்டி வதைத்த நிலையில், வாணியம்பாடி அடுத்த நெக்குந்தி பகுதியில் சுமார் 45 ஏக்கர் பரப்பளவில் உள்ள ஏரியில் கடும் வெயிலால், ஏரியில் இருந்த நீர் வற்றிவிட்டது.
இந்த நிலையில், ஏரியில் இருந்த பல்லாயிரக்கணக்கான மீன்கள் கடும் வெயினாலும், நீர் பற்றாக்குறையினாலும், செத்து மிதக்கின்றது, மேலும் செத்து மிதந்த மீன்களிலிருந்து புழுக்கள் வெளியேறி துர்நாற்றம் வீசுவதால் நோய் தொற்று ஏற்படும் அபாயம் உள்ளதாக அப்பகுதி மக்கள் அச்சமடைந்து வருகின்றனர்.