பழைய ஓய்வூதியதிட்டத்தை அமுல்படுத்தினால் நிதிச்சுமை ஏற்படும்! நிபுணர்கள் எச்சரிக்கை!

பழைய ஓய்வூதியதிட்டத்தை அமுல்படுத்தினால் நிதிச்சுமை ஏற்படும்! நிபுணர்கள் எச்சரிக்கை!

ம.பா.கெஜராஜ்,

 மீண்டும் பழைய ஓய்வூதிய திட்டம் அமல்படுத்தப்படும் என்று திமுக அளித்த தேர்தல் வாக்குறுதியை, தற்போது நிறைவேற்றியே தீர வேண்டிய சூழல் முதலமைச்சரின் முன் நிற்கிறது. ஒரு வேளை இந்த வாக்குறுதியை நிறைவேற்ற தாமதமானால் அரசு ஊழியர்களும்,  ஆசிரியர்களும் அரசை பிளாக்மெயில் பன்ண தயங்கமாட்டார்கள் எனது பலருக்கும் தெரிந்த உண்மையாகும்.

  அரசு ஊழியர்களுக்கு 2003 இல் புதிய ஓய்வூதிய திட்டத்தை அப்போதைய முதலமைச்சர் ஜெயலலிதா துணிச்சலாக அமல்படுத்தினார்.

  அதாவது, 2003 ஏப்ரல் 1 ஆம் தேதி முதல் அரசுப் பணியில் சேரும் ஊழியர்களுக்கு, அதுநாள்வரை அமலில் இருந்த பழைய ஓய்வூதியம் திட்டம் பொருந்தாது எனவும், இனி வரும் காலங்களில் அரசுப் பணியாளர்களுக்கு பங்களிப்பு ஓய்வூதியத் திட்டம் எனப்படும் புதிய ஓய்வூதிய திட்டம் அமல்படுத்தப்படும் என்றும் ஜெயலலிதா அதிரடியாக அறிவித்தார்.

  இந்தியாவிலேயே முதல் மாநிலமாக தமிழக அரசு செயல்படுத்திய இந்த திட்டம், அரசாங்கத்தின் செலவை குறைப்பதாக இருக்கிறதே என்று கண்டு வியந்த மத்திய அரசு, 2004 ஜனவரி 1 ஆம் தேதி முதல் தங்களது ஊழியர்களுக்கும் புதிய ஓய்வூதிய திட்டத்தை செயல்படுத்தியது.

   இதைப் பார்த்த  மற்ற பல மாநிலங்களும் பங்களிப்பு ஓய்வூதிய திட்டத்தை அடுத்தடுத்து அமல்படுத்தின.

  இந்த திட்டத்துக்கு எதிர்பாக அரசு ஊழியர்கள், ஆசிரியர்களின் தொடர் போராட்டங்களை நடத்தினர். இதனைக் கண்டு கொஞ்சம் மனம் இறங்கிய ஜெயலலிதா, அதிமுக மீண்டும் ஆட்சிக்கு வந்தால், புதிய ஓய்வூதிய திட்டம் ரத்து செய்யப்படும் என்று 2011 சட்டமன்ற தேர்தலின்போது வாக்குறுதி அளித்திருந்தார்.

   ஆனால், 2011 இல் அதிமுக மீண்டும் ஆட்சிக்கு வந்த பிறகும், தான் சொன்னப்படி புதிய ஓய்வூதிய திட்டத்தை ஜெயலலிதா ரத்து செய்யவில்லை. இதனால் அரசு ஊழியர்கள் மீண்டும் போராட்டத்தை கையில் எடுத்தார்கள். அப்படியே ஐந்து ஆண்டுகள் ஓடிய நிலையில், 2016 இல் அதிமுக மீண்டும் ஆட்சிக்கு வந்த பின்னரே, புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்வது தொடர்பாக வல்லுநர் குழு அமைக்கப்பட்டது. 

அந்த திட்டத்தைத்தான் ரத்து சொய்வோம் என்று திமுக மைக்குகள் 2021 தேர்தல் பிரச்சாராத்தில் அலறியது.

 ஆகவே சொன்னபடி இந்த திட்டத்தை ரத்து செய்ய வேண்டிய நிர்பந்தம் ஸ்டாலினுக்கு ஏற்பட்டுள்ளது. இருப்பினும் ஜெயலலிதா 2011 ஆம் ஆண்டு பிரச்சாரத்தில் சொல்லிவிட்டு பின்னர் அதை ஓரம்கட்டி மக்கள் நலனில் கவனத்தை செலவிட்டதைப்போல் இருப்பாரா என்று பலரும் எதிர்பார்க்கிறார்கள்.

  ஆனால் தமிழக முதல்வராக ஸ்டாலின் பொறுபேற்று ஓராண்டுக்கு மேல் ஆகிவிட்ட நிலையிலும், புதிய ஓய்வூதிய திட்டத்தை திமுக அரசு இன்னும் ரத்து செய்யவில்லை.

 குறிப்பாக கருணாநிதிக்கு பிறகு ஜெயலலிதா, ஓபிஎஸ். இபிஎஸ் என யாருமே இத்திட்டத்தை ரத்து செய்ய முன்வரவில்லை.

ஆனால் ஜெயலலிதா காலத்தில் அமைக்கப்பட்ட குழு தமது பரிந்துரை அறிக்கையை 2018 ஆம் ஆண்டிலேயே தந்துவிட்ட நிலையில், ஜெயலலிதாவின் வழியில் ஆட்சி செய்வதாக சொல்லிக் கொண்டிருந்த எடப்பாடி பழனிசாமி, 2021 இல் அதிமுக ஆட்சி முடியும் வரை புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்யவில்லை.

  இந்நிலையில் அரசின் மொத்த வருவாயில் 80 சதவீதத்துக்கும் மேல் அரசு ஊழியர்களின் ஊதியம் உள்ளிட்டவற்றுக்கு செலவழிக்கப்பட்டு வரும் நிலையில், 20 ஆண்டுகளுக்கு பிறகு பழைய ஓய்வூதிய திட்டம் மீண்டும் அமல்படுத்தப்பட்டால் அது தமிழக அரசுக்கு கூடுதல் நிதிச் சுமையாகவே இருக்கும் என்கின்றனர் பொருளாதார வல்லுநர்கள்.

  ஆகவே முதல்வர் அவர்கள் நிதிச்சுமை இல்லா தமிழகத்தை வழிநடத்த வேண்டுமானால் பழைய ஓய்வூதிய திட்டத்தை அமுல்படுத்தக்கூடாது என்று பொருளாதார மேதைகள் எச்சரிக்கிறார்கள்.