ஐஸ் வியாபாரி டாஸ்மார்க் கடை அருகே கொலை!

கு.அசோக்,
அரசு மதுபான கடை அருகில் ஐஸ் வியாபாரி கத்தியால் குத்தி கொலை செய்யப்பட்டார்.
ராணிப்பேட்டைமாவட்டம், பாலாபுரம் கிராமத்தை சேர்ந்தவர் நாராயண மூர்த்தி. அவர் சுத்துப்பட்டு கிராமங்களில் சைக்கிளில் ஐஸ் வியாபாரம் செய்து வருகிறார்.
நேற்று மாலை வீட்டில் இருந்து வெளியே சென்றவர் ஊழல் திரும்பாததால் உறவினர்கள் அக்கம் பக்கம் தேடி வந்த நிலையில் இன்று காலை டாஸ்மாக் அருகே சலலமாக கண்டுபிடிக்கப்பட்டார்.
பள்ளேரி கிராமத்தின் அரசு மதுபான கடை எண்: 11360 அருகில் இறந்து கிடந்தார்.
இடது பக்க கழுத்து, மார்பு, முதுகில் இரண்டு இடங்களில் என கத்தி வெட்டு காணப்பட்டது.
சம்பவ இடத்தில் சிப்காட் போலீசார் பிரேதத்தை கைப்பற்றி, வேலூர் அடுக்குமாரில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
இந்நிலையில் அவரை யார் எந்த காரணத்துக்காக கொன்றனர்என்று போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்