ராட்வீலர் உட்பட 23 வகையான வெளிநாட்டு நாய் இனங்களுக்கு தடை!முழு பட்டியல் வெளியீடு!

ராட்வீலர் உட்பட 23 வகையான வெளிநாட்டு நாய் இனங்களுக்கு தடை!முழு பட்டியல் வெளியீடு!

ம.பா.கெஜராஜ்,

ராட்வீலர் உட்பட 23 வகையான வெளிநாட்டு நாய் இனங்களை விற்க, வளர்க்க தமிழக அரசு தடை விதித்திருக்கிறது.

 கடந்த மே 6ஆம் தேதி சென்னையில் ராட்வீலர் இன நாய் கடித்ததில் 5 வயது சிறுமி படுகாயம் அடைந்து தற்போது வரை அவள் சிகிச்சை பெற்று வருகிறாள்.

 அதனை தொடர்ந்து பொதுமக்கள் பலரும் இந்த சம்பவத்தைக் கண்டித்து தங்களது கண்டனங்களை தெரிவித்தனர்.  இந்நிலையில் தமிழ்நாடு அரசு 23 வகையான வெளிநாட்டு நாய் இனங்கள் மற்றும் அவற்றின் கலப்பினங்களை இறக்குமதி செய்ய, இனப்பெருக்கம் செய்ய, வளர்ப்புப் பிராணிகளாக விற்பனை செய்ய தடை விதித்துள்ளது.

  அந்த வகையில், பிட்புல் டெரியர்,தோசா இனு, அமெரிக்கன் ஸ்டப்போர்டு ஷயர் டெரியர், ஃபிலா ப்ரேசிலேரியா, டோகா அர்ஜெண்டினா, அமெரிக்கன் புல்டாக், போயர் போயல், கன்கல், செண்ட்ரல் ஆசியன் ஷெபர்டு டாக், காக்கேஷியன் ஹெபர்டு, சௌத் ரஷ்யன் ஷெபர்டு டாக், டோன் ஜாக், ஜாப்னிஸ் தோசா, ராட்வீலர்ஸ், டெரியர், ரொடீசியன் ரிட்ஜ்பேக், உல்ப் டாக், கேனரியோ அக்பாஸ், மாஸ்கோ கார்ட் டாக், கேன்கார்சோ, பேண்டாக், அகிதா மேஸ்டிப், சர்ப்ளேஎனினேக் ஆகிய நாய்களுக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

மேற்படி நாய் இனங்கள் ஆக்ரோஷமானவை என்றும் மனிதர்களுக்கு ஆபத்தை விளைவிக்கும் நாய்கள் எனவும் இந்திய அரசின் கால்நடை பராமரிப்பு வல்லுநர்கள் மற்றும் துறை சார்ந்த பங்கேற்பாளர்கள் குழு பட்டியலிட்டு உள்ளதாகவும் தமிழ்நாடு அரசின் செய்திக் குறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

  பணக்காரர்கள் நாய்க்கு பகட்டாக உடையணிவித்து தங்கச்சங்கிலியில் கட்டி அதை கூட்டிக்கொண்டு உலாவரும் செயல்கள் எல்லாம் இனி நடக்காது.