கொரோனாவால் போனமுறை ஏமாந்துவிட்டேன்! அமைச்சர் துரைமுருகன் ஆவேச பேச்சு!

ம.பா.கெஜராஜ்,

  கொரோனா காரணத்தால் போன முறை நான் ஏமாந்துவிட்டேன், எல்லோரும் நல்லவர்கள் என நினைத்து இருந்தேன் அதன் விளைவாக சில பாடங்களை கற்றுக்கொண்டேன். அந்த பாடங்களை நான் மறக்க மாட்டேன் என்று  திமுக பொதுச்செயலாளரும், தமிழக அமைச்சருமான துரைமுருகன் அக்கட்சி நிர்வாகிகள் மத்தியில் பேசினார்.

   காட்பாடி தொகுதி வாக்குச்சாவடி முகவர்கள் ஆலோசனை கூட்டம் தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது இதில் பொதுச் செயலாளரும் நீர்வளத்துறை அமைச்சருமான துரைமுருகன், அணைக்கட்டு சட்டமன்ற உறுப்பினரும் மாவட்ட செயலாளருமான நந்தகுமார் மற்றும் வாக்கு சாவடி முகவர்கள் கலந்து கொண்டனர்

இதில் பேசிய துரைமுருகன்

 தேர்தலில் எப்படி வியூகம் வகுப்பார்கள், எதிர்க்கட்சி  எப்படி வியூகம் வகுப்பார்கள்நமது கட்சியிலிருந்து எதிர்க்கட்சிக்கு எப்படி ஓட்டு போடுவார்கள் என்பது எல்லாம் எனக்கு தெரியும்.

 கடந்த தேர்தலில் நான் ஏமாந்ததற்கு காரணம் கொரோனா. அது வந்ததால் நான் படுத்து விட்டேன்

என்னால் வேகமாக வர முடியவில்லை போக முடியவில்லை. இல்லை என்றால் கண்ணில் விரலை விட்டு ஆட்டி இருப்பேன்.

 சில துரோகங்கள் சேர்ந்து நடத்தி விட்டார்கள், அதுவும் எனக்கு தெரியும்

ஆகையினால் துரோகிகளை களையெடுத்து விட்டு  தேர்தல் பணிகளை வெற்றிகரமாக நடத்தும் ஆற்றல்  இந்த துரைமுருகனுக்கு உண்டு

நான் யாரையும் மன்னிப்பேன் ஆனால் கட்சிக்கு துரோகம் செய்பவனை மன்னிக்க மாட்டேன்

எதிரியே என்னை கொல்ல வந்தாலும் மன்னிப்பேன் நம்முடைய கட்சி இது என்னுடைய கட்சி.

இந்த கட்சிக்கு துரோகம் செய்வதை விட உலகத்தில் கொடுமை இருக்க முடியாது.

கடந்த முறை எல்லோரும் நல்லவர்கள் என்று நினைத்து விட்டேன் அதன் விளைவு தான் பல பாடங்கள் எனக்கு கற்பிக்கப்பட்டது

  60- 70 ஆண்டுகள் இந்த கட்சியை நான் வளர்த்தவன், ஆகையால் இது எனது கட்சி, நம்முடைய கட்சி என்ற புத்தியோடு இருக்கிறேன்.

அந்த கட்சிக்கு துரோகம் செய்பவதை விட வேறு கொடுமை இருக்க முடியாது. போன முறை நான் எல்லோரும் நல்லவர்கள் என நினைத்து இருந்தேன். அதனால் சில பாடங்கள் கற்றுக்கொண்டேன்.

 அந்த பாடத்தை திரும்பி பார்க்க மாட்டேன்" இவ்வாறு துரைமுருகன் பேசி பரபரக்க வைத்தார்.