மேட்டூர் உபரி நீரை ஒரே ஒரு ஏரிக்குமட்டுமே வழங்கியவர் எடப்பாடி பழனிச்சாமி! அமைச்சர் துரைமுருகன் பேட்டி!
ஜி.கே.சேகரன்,
எடப்பாடி பழனிசாமி மேட்டூர் உபரி நீர் திட்டத்தை ஒரு ஏரிக்கு மட்டுமே செயல்படுத்தினார். மற்ற ஏரிக்கு நீரை கொண்டு சென்றது திமுக தான் காட்பாடியில் தமிழக நீர் வளத்துறை அமைச்சர் துரைமுருகன் பேட்டி
வேலூர்மாவட்டம்,காட்பாடியில் தனியார் மண்டபத்தில் வேலூர் மாவட்டத்தின் 71ஆவது கூட்டுறவு வார விழா வேலூர் மாவட்ட ஆட்சியர் சுப்புலெட்சுமி தலைமையில் நடைபெற்றது. விழாவில் சிறப்பு அழைப்பாளராக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் கலந்து கொண்டு 1444 பயனாளிகளுக்கு ரூ.11.19 கோடி கடன் உதவி வழங்கினார்.
2023-24ம் ஆண்டில் சிறந்த கூட்டுறவு நிறுவனங்களுக்கு கேடயங்கள் வழங்கினார் இவ்விழாவில் சட்டமன்ற உறுப்பினர்கள் கார்த்திகேயன்,நந்தகுமார்,துணை மேயர் சுனில்,மாவட்ட ஊராட்சி தலைவர் பாபு மண்டல குழு தலைவர்கள் புஷ்பலதா,நரேந்திரன் உள்ளிட்டோரும் திரளான பொதுமக்களும் கலந்துகொண்டனர் கூட்டுறவு உறுதிமொழியையும் அனைவரும் ஏற்றுகொண்டனர்
பின்னர் செய்தியாளர்களின் கேள்விக்கு பதில் அளித்தார்.
அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி மேட்டூர் அணையிலிருந்து உபரி நீர் திறக்கப்பட்டதாக விவசாயிகள்பாராட்டு விழா நடத்தப் போவதாக கூறப்படுவது குறித்த கேள்விக்கு, எடப்பாடி பழனிச்சாமிக்கு பாராட்டு விழா நடத்துவதைபற்றி ஒன்றும் இல்லை எடப்பாடி பழனிசாமி அவருடைய ஆட்சி காலத்தில் மேட்டூர் அணையிலிருந்து உபரி நீரை ஒரே ஒருஏரிக்கு தான் அனுப்பினார்கள்.
ஆனால் எல்லாவற்றையும் தன்னுடைய ஆட்சி காலத்தில் செய்ததாக கூறுகிறார். திமுக ஆட்சியில் தான் எல்லா ஏரிகளுக்கும் தண்ணீர் அனுப்பியது என்று பதிலளித்தார்
முன்னதாக இதே போன்று காட்பாடி அடுத்த செம்ராய நல்லூர் பகுதியில்சமூக நலன் மற்றும் மகளிர் துறை துறை சார்பில் ஒரு வயதிற்கு உட்பட்டு ஊட்டச்சத்து குறைபாட்டினால் பாதிக்கப்பட்ட குழந்தைகளின் ஊட்டச்சத்து உறுதி செய் திட்டம் இரண்டாம் கட்டமாகபாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு ஊட்டச்சத்து பெட்டகம் வழங்கும் விழா மாவட்ட ஆட்சியர் சுப்புலட்சுமி தலைமையில் நடைபெற்றது.
அமைச்சர் துரைமுருகன் விழாவில் கலந்து கொண்டு ஊட்டச்சத்து பெட்டகங்களை வழங்கினார்.