ஹோலி ….கிலி!   ஜப்பானிய பெண்மணியை சீண்டியதால் பிரச்சனை!

ஹோலி ….கிலி!   ஜப்பானிய பெண்மணியை சீண்டியதால் பிரச்சனை!

 ஜார்ஜ்.ரவி,

  வட இந்தியா முழுவதும் ஹோலி பண்டிகை அமர்கலப்பட்டது.

 இந்நிலையில் டெல்லியில் ஜப்பானிய சிறுமிக்கு இளைஞர்கள் குழு ஒன்று ஹோலி பண்டிக்கை என்கிற பெயரில் கிலியை ஏற்படுத்தினார்கள்.

 அந்த சிறுமியை துன்புறுத்துவது போன்று வீடியோ வெளியானது. அதில், ஜப்பானிய இளம்பெண்ணை வாலிபர் ஒருவர் பிடித்து அவர் மீது வண்ணப்பொடிகளை தூவுவதுடன் அந்த பெண் மீது முட்டையை உடைப்பது போன்றும், தண்ணீரை பீய்ச்சி அடித்து அத்துமீறுவது போன்றும், அந்த நபர்களின் பிடியில் இருந்து இளம்பெண் தப்பிக்க முயல்வது போன்றும், அந்த பெண்ணை ஒருவர் கன்னத்தில் அறைவது போன்றும் காட்சிகள் இடம் பெற்றிருந்தன.

  இந்த வீடியோ காட்சிகள் பரவலானதும், தேசிய மகளிர் ஆணையம் தலையி போலீசார் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்து, விரிவான விசாரணை நடத்தி அறிக்கை அளிக்க உத்தரவிட்டது.

 இதைத்தொடர்ந்து டெல்லி போலீசார் வீடியோ தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். அப்போது பஹர்கஞ்ச் என்ற இடத்தில் ஜப்பானிய இளம்பெண் மீது இந்த துன்புறுத்தல் நடந்தது கண்டறியப்பட்டது.

 இது தொடர்பாக விசாரணை நடத்திய போலீசார் பெண்ணை துன்புறுத்தியதாக சிறுவன் உள்பட 3 பேரை கைது செய்தனர். அவர்கள் நடந்த சம்பவத்தை ஒப்புக்கொண்டுள்ளதாக துணைபோலீஸ் கமிஷனர் சஞ்சய்குமார் சைன் தெரிவித்தார். இதுதொடர்பாக அவர் மேலும் கூறுகையில், சம்பவம் தொடர்பாக எந்த ஒரு வெளிநாட்டவரிடம் இருந்தும் புகார்கள் வரவில்லை. அதே நேரம் சம்பந்தப்பட்ட பெண் குறித்த விபரங்களை அறிய உதவுமாறு ஜப்பானிய தூதரகத்திற்கு இ-மெயில் அனுப்பப்பட்டுள்ளது என்றார்.

   இதற்கிடையே சம்பந்தப்பட்ட பெண் ஜப்பானிய சுற்றுலா பயணி என்றும், டெல்லியில் உள்ள பஹர்கஞ்ச் பகுதியில் தங்கியிருந்த அவர் தற்போது வங்கதேசத்திற்கு சென்று விட்டதாகவும் போலீசார் தெரிவித்தனர்.

  பகூத் அச்சா ஹை?! அவ்ளோ ஸ்பீடா நடவடிக்கை எடுத்திருக்கிறார்கள்.