புல்லூர் தடுப்பணியில் அம்மன் சிலை கண்டெடுப்பு!

ஜி.கே.சேகரன்,
வாணியம்பாடி அருகே புல்லூர் தடுப்பணியில் அம்மன் சிலை கண்டெடுப்பு சிறுவர்கள் குளிக்க சென்ற போது கண்டெடுக்கப்பட்டது.
திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடி அருகே தமிழக ஆந்திரா எல்லைப் பகுதியில் உள்ள புல்லூர் தடுப்பனையில் கடந்த இரண்டு ஆண்டுகளாக நிரம்பியிருந்தது. தற்போது கோடை வெயில் காரணமாக கடந்த 15 நாட்களாக நீர் வற்றி தற்போது ஒரு சிறிய குட்டை போல் தேங்கி நிற்கிறது.
இதில் நேற்று உள்ளூர் மற்றும் அதனை சுற்றியுள்ள கிராமத்தை சேர்ந்த இளைஞர்கள் குளிக்கச் சென்றுள்ளனர். அவர்கள் குளித்து போது காலில் ஏதோ தென்பட்டதாக தெரிகிறது.அதனை எடுத்து பார்த்தபோது அது அம்மன் சிலையாக இருந்தது தெரியவந்தது.
இது குறித்து திம்மம்பேட்டை போலீசார் மற்றும் குப்பம் போலீசாருக்கு தகவல் அளித்துள்ளனர்.அங்கு வந்த குப்பம் போலீசார் சிலையை மீட்டு வருவாய்த் துறையிடம் ஒப்படைத்ததாக கூறப்படுகிறது. இது குறித்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.3 அடி உயரம் இருந்தது அம்மன் சிலை இங்கு கொண்டு வந்து போட்டது யார் என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.