ராசாயனம் மூலம் பழுக்கவைக்கப்பட்ட 2.5 டன் சாத்துக்குடி அழிப்பு!

ராசாயனம் மூலம் பழுக்கவைக்கப்பட்ட 2.5 டன் சாத்துக்குடி அழிப்பு!

 ஜே.அருண் ஹென்றிக்ஸ்,

  கோவை மாவட்டத்தில் பழ மார்க்கெட் மற்றும் மண்டிகளில் ரசாயனம் மூலம் பழங்களை செயற்கையாக பழுக்க வைத்து விற்பதாக அதிகாரிகளுக்கு தகவல்கள் சென்றன.

 அதன் அடிப்படையில், உக்கடம், சந்தை பகுதிகளில் செயற்கையான முறையில் பழுக்க வைக்கப்பட்ட 22.5 டன் மாம்பழங்கள் மற்றும் 2.5 டன் சாத்துக்குடி பழங்களை உணவு பாதுகாப்பு அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

  பறிமுதல் செய்த பழங்களை வெள்ளலூர் குப்பை கிடங்கில் கொட்டி அழித்து, இயற்கை உரமாக தயாரிக்கவும்   அதிகாரிகள் நடவடிக்கை எடுத்தனர்.

  அவர்களிடம் பேசியதில் இது போன்ற திடீர் சோதனைகள் மாவட்டம் முழுவதும் நடைபெறும் என்று சொன்னார்கள்.