பெண் எஸ்.ஐ.யின் அடாவடி! கணவன் எந்த பெண்ணுடனும் உறவாடலாம் என்று வழிகாட்டுகிறார்!

பெண் எஸ்.ஐ.யின் அடாவடி! கணவன் எந்த பெண்ணுடனும் உறவாடலாம் என்று வழிகாட்டுகிறார்!

ம.பா.கெஜராஜ்,

 திருப்பத்தூர் மாவட்டம், திருப்பத்தூர் காவல் உட்கோட்ட அலுவலகத்தில் ஒரு பெண் எஸ். எஸ். ஐ. சீறுடை அணியாத பணியை செய்து வருகிறார்.

 பழைய சினிமா நடிகையின் (கடல் மீன்கள் கதாநாயகி) பெயரைக் கொண்ட அவர், தன்னை பெரிய அதிகாரி என்று சொல்லிக் கொண்டு அனைத்து பெட்டிஷன்களையும் விசாரித்து வருகிறார்.

 அப்படியிருக்க, புகார்தாரர்களை மிரட்டி குற்றவாளிகளுக்கு ஆதரவாக போகும்படி மிரட்டுகிறார் என அவர் மீது குற்றச்சாட்டுகள் கூறப்படுகிறது.

  அப்படிதான் ஒரு புகார்தாரரை இந்த இந்த எஸ் .எஸ். ஐ மிரட்டிய போது அதை அப்படியே அவரது செல் போனில் பதிவுசெய்து கொண்டு உட்கோட்ட அதிகாரியிடம் போட்டுக் காட்டியிருக்கிறார்.

  இதனால் கோபம் கொண்ட உட்கோட்ட அதிகாரி, அந்த பெண் எஸ்.எஸ்.ஐ யை  கடிந்துக் கொண்டாராம். அதன் பின்னரும் அடங்காத அவர் தன்னை போட்டுக் கொடுத்தவரை அழைத்து, என் வேலை போனால் என் புருஷன் சோறு போடுவான். நான் அதற்கெல்லாம் கவலைப்படவில்லை என்று சவுண்டு விட்டுள்ளார்.  

  அதே போல், தன் கணவர் வேறு பெண்ணுடன் உறவு வைத்துள்ளார் என்று புகார் அளித்தவரிடம், அப்படி சுற்றலாம் என்று உச்ச நீதிமன்றமே அனுமதியளித்திருக்கிறது என்று எதையோ சொல்லி கள்ள உறவுக்கு ஜால்ரா அடிக்கிறாராம்.

   பாதிக்கப்பட்டவர்களை டார்ச்சர் செய்து வரும் அந்த பெண் எஸ். எஸ். ஐ, குற்றவாளிகளிடம் கனிசமாக பரிசு பொருட்களைப் பெற்று கல்லாகட்டி வருகிறாராம்.

  இதையெல்லாம் உட்கோட்ட அதிகாரி நோட்டமிட வேண்டும் என்பது பலரின் அவா?