கனமழையால் இராணிப்பேட்டை விவசாயிகள் மகிழ்ச்சி!

கு.அசோக்,
இராணிப்பேட்டை பகுதிகளில் ஒரு மணி நேரம் வெளுத்து வாங்கிய கனமழை.- விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் மகிழ்ச்சி.
இராணிப்பேட்டை மாவட்டம், நெமிலி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளான பள்ளுர், திருமால்பூ£,¢ சேர்ந்தமங்கலம், தக்கோலம் ஆகிய பகுதிகளில் மாலை நேரத்தில் லேசான மழையும் இரவு ஒரு மணி நேரத்திற்கு மேலாக இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்தது.
கனமழை காரணமாக, சாலைகளில் நீர் பெருக்கெடுத்து ஓடியது. இரவு நேரத்தில் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக வெளுத்து வாங்கிய கனமழையால் குளிர்ச்சியான சூழல் நிலவுகிறது.
திடீரென பெய்த இந்த கனமழயால் விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.