அப்பாடா? தோல் தொழிற்சாலையை மூடிய அதிகாரி! மின் இணைப்பும் கட்!!

ஜி.கே.சேகரன்,
வாணியம்பாடி அருகே தனியார் தோல் தொழிற்சாலை வளாகத்தில் தோல் கழிவு நீரை குழி தோண்டி தேக்கி வைத்ததால் தொழிற்சாலை மூடவும், மின் இணைப்பு துண்டித்து மாசுக்கட்டுப்பாட்டு வாரியம், மாவட்ட பொறியாளர் கோபாலகிருஷ்ணன் நடவடிக்கை.
திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடியில் 100-க்கும் மேற்பட்ட தோல் தொழிற்சாலைகள் இயங்கி வருகின்றது.இதில் வெளியேற்றப்படும் தோல் கழிவு நீரை வளையாம்பட்டு பகுதியில் உள்ள வாணியம்பாடி தோல் கழிவு நீர் பொது சுத்திகரிப்பு நிலையத்திற்கு அனுப்பப்பட்டு அங்கு சுத்திகரிப்பு செய்து மீண்டும் தொழிசாலைகளுக்கு அனுப்பப்பட வேண்டும்.
ஆனால் அப்படி எதுவும் அங்கு நடப்பதில்லை என்பது பலருக்கும் தெரியும்.
இந்த நிலையில் வாணியம்பாடி அடுத்த உதயேந்திரம் பேரூராட்சி பகுதியில் இயங்கி வரும் உஸ்மானியா இண்டஸ்ட்ரீஸ் என்ற தோல் தொழிற்சாலையின் தோல் கழிவு நீரை பொது சுத்திகரிப்பு நிலையத்திற்கு அனுப்பி வைக்காமல் தொழிற்சாலையில் பின்புறத்தில் தேக்கி வைத்து இருப்பதாக புகார் எழுந்தது.
இந்த ரகசிய தகவல் மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் மாவட்ட பொறியாளர் கோபாலகிருஷ்ணனுக்கு கிடைத்தது.
அதன் அடிப்படையில் மாவட்ட சுற்றுச்சூழல் பொறியாளர் கோபாலகிருஷ்ணன் விரைந்து சென்று ஆய்வு மேற்கொண்டார்.
அப்போது நிலத்தடி நீர் பாதிக்கும் வகையில் தோல் கழிவு நீரை சுத்திகரிப்பு நிலையத்திற்கு அனுப்பாமல் தேக்கி வைத்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.
இதனை தொடர்ந்து தனியார் தோல் தொழிற்சாலையின் மின் இணைப்பை துண்டிக்கவும், மூடவும் உத்தரவிட்டார்.அதன் அடிப்படையில் இன்று மின் இணைப்பு துண்டிக்கப்பட்டுள்ளது. மேலும் சுற்றுச்சூழல் பாதிக்கும் வகையில் ஈடுபடும் தொழிற்சாலைகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட சுற்றுச்சூழல் பொறியாளர் கோபாலகிருஷ்ணன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.