காங்கிரஸ் மாவட்ட தலைவர் கொலை! முக்கிய தடயம் கிடைத்திருப்பதாக தகவல்! பிரேத பரிசோதனை அறிக்கையில் பகீர்!

கே.ஏ.ஜெகதீஸ்வரி,
நெல்லை கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் ஜெயக்குமார் மர்மமான முறையில் உயிரிழந்தார்.
இது குறித்து காவல்துறை தனிப்படைகள் அமைக்கப்பட்ட நிலையில், ஜெயக்குமாரின் உடல் பிரேத பரிசோதனை நடத்தப்பட்டது இந்நிலையில் அதன் முடிவுகள் வந்திருக்கின்ற நிலையில் பகீர் தகவல்கள் அதில் உள்ளன.
நெல்லை மாவட்டம், திசையன்விளை, கரைச்சுத்துபுதூரை சேர்ந்த நெல்லை கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் ஜெயக்குமார் தனசிங் (60) கடந்த 2ம் தேதி மாயமானார். அதற்கு அடுத்த நாள் அவரது மகன் கருத்தையா ஜெப்ரின் (28) உவரி காவல் நிலையத்தில் தனது தந்தையை காணவில்லை எனவும், கடைசியாக வீட்டில் இருந்து செல்வதற்கு முன் மரண வாக்குமூலம் என்ற பெயரில் எழுதிய கடிதம் கிடைத்துள்ளது எனவும் புகார் அளித்தார்.
இந்நிலையில் 4ம் தேதி அதே பகுதியில் அவர்களுக்கு சொந்தமான தோட்டத்தில் ஜெயக்குமார் உடலை எரிந்த நிலையில் போலீசார் மீட்டனர். ஜெயக்குமார் எழுதியதாக மேலும் ஒரு கடிதம் சமூக வலைதளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. அதில் ஜெயக்குமார் தனக்கு பணம் தர வேண்டிய முக்கிய நபர்களின் பெயர்களை குறிப்பிட்டு இருந்தார். கடிதங்களில் ஜெயக்குமார் குறிப்பிட்டுள்ள நபர்களின் செல்போன் எண்களை போலீசார் தொடர்பு கொண்ட போது பலர் 'சுவிட்ச் ஆப்' செய்திருப்பது தெரியவந்துள்ளது. மேலும், ஜெயக்குமாருக்கு நேரடியாக கொலை மிரட்டல் விடுத்ததாகக் கூறப்படும் முக்கிய பிரமுகர் ஒருவர் தலைமறைவாகிவிட்டார்.
இந்நிலையில் ஜெயக்குமாரின் குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறுவதற்காக தமிழ்நாடு காங்கிரஸ் முன்னாள் தலைவர் கே.எஸ்.அழகிரி நேற்று காலை திசையன்விளை அருகே உள்ள கரைசுத்து புதூரில் உள்ள ஜெயக்குமார் இல்லத்திற்கு வந்தார். அங்கு அவரது மகன்களுக்கு ஆறுதல் கூறினார்.
பின்னர் அவர் பேட்டி அளித்த்தார். இது திட்டமிட்ட கொலை தான். வேறு இடத்தில் கொலை செய்துவிட்டு இங்கு உடலை கொண்டு வந்து எரித்துள்ளனர். தொழில் ரீதியான கொலையாளிகள், அதாவது கூலிப்படையினர் தான் இதை செய்திருக்க வேண்டும். தமிழக காவல்துறை மீது மிகுந்த நம்பிக்கை வைத்திருக்கிறோம்.
விரைவாக குற்றவாளிகளை கண்டுபிடிப்பார்கள் என்று நம்புகிறோம். கொலை என்பது உறுதி. இதைத் தவிர நான் வேறு எதுவும் சொல்ல முடியாது. இதை அரசியலாக்க விரும்பவில்லை. காவல்துறை தான் இந்த கொலை குறித்த ரகசியத்தை மீட்டெடுக்க வேண்டும்.
ஜெயக்குமார் எனக்கு மிகவும் நெருங்கிய நண்பர். அவரது கஷ்டங்கள் குறித்து என்னுடன் எதுவும் பகிர்ந்து கொள்ளவில்லை. அவர் எழுதிய கடிதங்களை நானும் பார்த்தேன். என்று அவர் சொல்லியிருக்கும் நேரத்தில்லிது தொடர்பாக முன்னாள் ஒன்றிய இணை அமைச்சர் தனுஷ்கோடி ஆதித்தன், அரசு மருத்துவரிடம் நேற்று விசாரணை நடத்தினர்.
மேலும் 4 பேரிடம் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தினர். ஏற்கனவே 7 தனிப்படைகள் அமைக்கப்பட்டு போலீசார் பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வரும் நிலையில் நேற்று மேலும் ஒரு தனிப்படை அமைத்து போலீசார் விசாரித்து வருகின்றனர். இந்நிலையில், நேற்று ஜெயக்குமார் தனசிங்கின் உறவினரும், நாகர்கோவில் அரசு மருத்துவமனை மயக்க மருந்தியல் துறை மருத்துவருமான செல்வகுமாரிடம் போலீசார் விசாரணை நடத்தினர்.
அதன்பின் நெல்லை, பாளைங்கோட்டை, ஜோதிபுரத்தில் உள்ள முன்னாள் ஒன்றிய இணை அமைச்சர் தனுஷ்கோடி ஆதித்தன் வீட்டிற்கும் சென்று தனிப்படை போலீசார் விசாரணை நடத்தினர். சென்னை, கேரளா உள்ளிட்ட இடங்களுக்கும் சென்று விசாரிக்க திட்டமிட்டுள்ளனர்.
அதே போல் ஜெயக்குமார் கான்ட்ராக்ட் உட்பட பல்வேறு தொழில்களை எடுத்து நடத்தி வந்துள்ளார். இதில் சிலரிடம் பணத்தை ஜெயக்குமாரின் மகன் கருத்தையா வாங்கி விடுவார். ஆனால் அதனை அவரது தந்தையிடம் கூற மறந்து விடுவாராம். இதனால் தந்தைக்கும், மகனுக்கும் இடையே வருத்தம் இருந்துள்ளதாகவும், மகளின் கணவரை (மருமகனை) நம்பி செயல்படும் அளவிற்கு அவர் இருந்துள்ளதாகவும் போலீஸ் தரப்பில் கூறப்படுகிறது.
மேலும் முக்கியமான தடயம் ஒன்று சிக்கியுள்ளதால் ஓரிரு நாட்களில் ஜெயக்குமாரின் மரணத்திலுள்ள சந்தேக முடிச்சுகள் அவிழும் என போலீசார் நம்பிக்கை தெரிவித்தனர்.
இந்நிலையில் ஜெயக்குமாரின் பிரேத பரிசோதனையின் அறிக்கை வெளியாகி இருக்கிறது அதில் அவரது உடல் எரிக்கப்பட்ட நிலையில் குரல்வளை இறுகி இருப்பதாகவும் அதேபோல்.
இறந்து போன உடலை தீயிட்டால் மட்டுமே குரல்வளை இருகும் என்றும் நுரையீரலில் திரவம் இருக்காது என்றும் மருத்துவ வட்டாரங்கள் தெரிவிக்கின்ற நிலையில் இது கொலைதான் என்று உறுதிப்படுத்தப்பட்டு இருக்கிறது.