ஆம்பூர் நெடுஞ்சாலையில் பாலம் கட்டும் பணியை துரிதப்படுத்திய கலெக்டர்!

ஆம்பூர் நெடுஞ்சாலையில் பாலம் கட்டும் பணியை துரிதப்படுத்திய கலெக்டர்!

ஆர்.ரமேஷ்,                                          

திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் நகர பகுதியில் நடைபெற்று வரும் தேசிய நெடுஞ்சாலை பணிகளால் போக்குவரத்து இடையூறு ஏற்படுவதாக பொது மக்கள் மற்றும் சமூக ஆர்வலர்களிடமிருந்து புகார்கள் வரப்பெற்றதன் அடிப்படையில் மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.க.தர்ப்பகராஜ், இ.ஆ.ப., அவர்கள் நேரடியாக ஆய்வு மேற்கொண்டார்.

திருப்பத்தூர் மாவட்டம், ஆம்பூர் பகுதியில் சென்னை - பெங்களுர் தேசிய நெடுஞ்சாலையில் புதியதாக மேம்பால கட்டுமான பணிகள் நடைபெற்று வருகிறது.

   இப்பணிகளினால் அப்பகுதியில் அவ்வப்போது போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதாக பொதுமக்களின் கோரிக்கையின் பால் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் ஆய்வு மேற்கொண்டார்.

   இவ்வாய்வின் போது தற்போதைய நிலையை குறித்த வரைபட தகவல்களின் வாயிலாக 31 தூண்கள் மூலம் மேம்பால சாலை அமைக்கப்பட்டு தற்போதைய நிலையில் 225 மீட்டர் எக்ஸ்டென்சன் ஸ்பேன் பணிகள் மட்டும் மேற்கொள்ளப்பட வேண்டியுள்ளதாகவும், கூடிய விரைவில் இப்பணிகள் முடிவடைவதாகவும் கலெக்டரிம் தெரிவிக்கப்பட்டது.

 இதில் பணிகள் முடிக்கப்பட்டுள்ள இடங்களில் தூய்மை பணிகளை மேற்கொண்டு, போக்குவரத்து இடையூறு இல்லா வண்ணம் சரிசெய்யப்படுவதாக ஒப்பந்ததாரர்கள் தெரிவித்தனர்.

 இதனை கேட்டுக்கொண்ட மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் பணிகளை துரிதப்படுத்தி, ஒப்பந்த காலத்திற்கு முன்பாகவே பணிகள் நிறைவடைய செய்ய வேண்டுமென்று தெரிவித்து, மேலும், இப்பணிகளின் வாயிலாக பொதுமக்களுக்கு போக்குவரத்து நெரிசல் ஏற்படாதவண்ணம், நெடுஞ்சாலைத்துறை கோட்டப் பொறியாளர், வருவாய் கோட்டாட்சியர், வட்டார போக்குவரத்து அலுவலர் மற்றும் காவல் துறை அலுவலர்கள் இணைந்து போக்குவரத்து இடையூறு ஏற்படாதவாறு மாற்றுப்பணிகளை மேற்கொள்ள மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.க.தர்ப்பகராஜ்,இ.ஆ.ப., அவர்கள் அறிவுறுத்தியுள்ளார்.

செய்தி வெளியீடு : செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், திருப்பத்தூர் மாவட்டம்.