குழந்தை திருமணத்தை தடுக்க செய்தியாளர்களுக்கு பயிற்சி!
ஜி.கே.சேகரன்,
வேலூரில் செய்தி மக்கள் தொடர்புத்துறையின் சார்பில் மத்திய அரசின் திட்டமான பெண் குழந்தைகளை காப்போம் பெண் குழந்தைகளுக்கு கற்பிப்போம் என்ற திட்டம் குறித்து செய்தியாளர்களுக்கான பயிற்சி நடைபெற்றது.
வேலூர்மாவட்டம், வேலூர் சத்துவாச்சாரியில் மாவட்ட ஆட்சியர் கூட்டரங்கில் செய்தி மக்கள் தொடர்புத்துறையின் சார்பில் சமூக நலத்துறை மூலம் செயல்படுத்தப்பட்டு வரும் மத்திய அரசின் பெண் குழந்தைகளை காப்போம் பெண் குழந்தைகளுக்கு கற்பிப்போம் என்ற திட்டத்தில் செய்தியாளர்களுக்கான பயிற்சி கூட்டம் நடந்தது.
இதில் பெண் குழந்தைகளை பாதுகாத்தல் பெண் சிசு கொலைகளை தடுத்தல் பெண் குழந்தைகள் கருக்கலைப்பை தடுத்தல் பெண் கல்வியை மேம்படுத்துதல் பெண் குழந்தை பிறப்பு விகிதம் அதிகரித்தல் பெண் கல்வி ஊக்கப்படுத்துதல் பெண் கொடுமைகள் தடுத்தல் குழந்தை திருமணம் தடுத்தல் ஆகியவைகள் செய்தியாளர்களுக்கு விளக்கி கூறப்பட்டது.
இதில் குழந்தைகள் பாதுகாப்பது குறித்து பல திட்டங்களை செயல்படுத்துவது குறித்தும் மத்திய அரசின் திட்டங்களை எடுத்து கூறினார்கள்.
குறிப்பாக கருவிலேயே பாலினம் கண்டறிந்து பெண் குழந்தைகள் கருக்கொலைகளை செய்ய வித்திடும் ஸ்கேன் செண்டர்கள் குறித்து தகவல் அளிக்குமாறு கூறினார்கள் இதில் வேலூர் மாவட்டத்தில் பணிபுரியும் சில செய்தியாளர்கள் கலந்துகொண்டனர்.
கூட்டத்தின் போது உறுதி மொழி ஏற்றுக் கொள்ளப்பட்டது.