மன்னார்குடியில் வலம் வந்த மத்திய பாதுகாப்பு படையினர்!

மன்னார்குடியில் வலம் வந்த மத்திய பாதுகாப்பு படையினர்!

G.Bala Guru,

மன்னார்குடி நகரில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தலைமையில் கொடி அணிவகுப்பு நடைபெற்றது.

நாடு முழுவதும் 2024 ஆம் ஆண்டுக்கான 18 வது மக்களவைத் தேர்தல்  ஏழு கட்டங்களாக நடைபெறும் தேர்தல் தேதியினை  தலைமை தேர்தல் ஆணையம் அறிவித்ததை அடுத்து தேர்தல் நடத்தை விதிமுறைகள்  அமலுக்கு வந்ததுள்ளது .

தமிழகத்தில் ஏப்., 19ல், பாராளுமன்ற  தேர்தல் நடைபெற உள்ளதை  முன்னிட்டு, தேர்தல் பணிகள் மும்முரமாக நடந்து வருகின்றன.

திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில்   வாக்காளர்கள் அச்சமின்றி வாக்களிக்கும் வகையில் மத்திய தொழில் பாதுகாப்பு படை வீரர்கள் மற்றும் தமிழக போலீசார் 300க்கும் மேற்பட்டோர்  தஞ்சாவூர் பாராளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட மன்னார்குடி சட்டமன்ற தொகுதியில் அணிவகுப்பு பேரணியில் ஈடுபட்டனர்.   

 

முன்னதாக பேரணியை   திருவாரூர் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் ஜெயக்குமார் தொடங்கி வைத்தார்.

  அணிவகுப்பு பேரணி  தேரடியில்  தொடங்கி பந்தலடி, கடைதெரு. உள்ளிட்ட முக்கிய வீதீகளின் வழியாக    சுமார் 5 கி.மீ., வரை சென்று  மன்னார்குடி கீழப்பாலம் பகுதியில் உள்ள  அரசு நடுநிலைப்பள்ளியில் வாயில் முன்பு முடிவடைந்தது.

அணிவகுப்பு பேரணியில் மன்னார்குடி உட்கோட்ட துணை காவல் கண்காணிப்பாளர் A.அஸ்வத் ஆண்டோ ஆரோக்கியராஜ் உடனிருந்தார்கள்.