அகர்பத்தி மிஷினில் சிக்கி சிறுவன் உயிரிழப்பு!

ஜி.கே.சேகரன்,
வாணியம்பாடி அருகே அகர்பத்தி தயாரிக்கும் தொழிற்சாலை மிஷினில் சிக்கி சிறுவன் உயிரிழப்பு,
திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அடுத்த மேட்டுப்பாளையம் பகுதியில் செயல்பட்டு வரும் அகர்பத்தி தயாரிக்கும் தனியார் தொழிற்சாலையில் பணிபுரிந்து வந்த காமராஜபுரம் பகுதியை சேர்ந்த 17 வயது சிறுவன் மோகன் என்பவர் மிஷினில் சிக்கி பலியானார் வாணியம்பாடி கிராமிய போலீசார் வழக்குபதிவு செய்து சிறுவனின் உடலை பிரேதபரிசோதனைக்காக வாணியம்பாடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.