செல்போனை தரமறுத்த பிகார் இளைஞர் திருப்பூரில் குத்திகொலை! போராட்டம் நடத்திய வடமாநிலத்தவர்!

செல்போனை தரமறுத்த பிகார் இளைஞர் திருப்பூரில் குத்திகொலை! போராட்டம் நடத்திய வடமாநிலத்தவர்!

 டி.இ.முகமது,

  திருப்பூர் கணியாம்பூண்டி பகுதியில் செயல்பட்டுவரும் பனியன் நிறுவனத்தில் வெளிமாநிலத் தொழிலாளர்கள் நிறைய பேர் பணியாற்றுகின்றனர். அதில் பிகார் மாநிலத்தை சேர்ந்த ஆகாஷ்குமார் என்ற இளைஞர்¢ பணியாற்றி வந்தார்.

 நேற்று முன்தினம் பணி முடிந்து ஆகாஷ்குமார் சென்றபோது, இருசக்கர வாகனத்தில் வந்த 3 பேர் அவரை வழிமறித்து, செல்போனைப் பறிக்க முயன்றனர். ஆகாஷ்குமார் செல்போனைத் தர மறுத்ததால், அந்த 3 பேரும் அவரை கத்தியால் குத்திவிட்டு, செல்போனைப் பறித்துக்கொண்டு தப்பினர்.

 சக தொழிலாளர்கள் ஆகாஷ்குமாரை மீட்டு, திருப்பூர் அரசுமருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவர் சிகிச்சை பலனின்றி நேற்று அதிகாலை உயிரிழந்தார். இது தொடர்பாக திருமுருகன்பூண்டி போலீஸார் விசாரித்து வருகின்றனர்.

 ஆகாஷ்குமாரை கொலை செய்தவர்களை உடனடியாக கைது செய்ய வலியுறுத்தி, அந்த நிறுவனத்தின் உள்ளே வடமாநிலத் தொழிலாளர்கள் நேற்று போராட்டத்தில் ஈடுபட்டனர். அங்கு வந்த போலீஸார், விரைவில் குற்றவாளிகள்கைது செய்யப்படுவார்கள் என்றுஉறுதி அளித்த பின்னர் தொழிலாளர்கள் போராட்டத்தை கைவிட்டனர்.

 ஆகாஷ் குமார் கொலைக்கு வேறு ஏதானும் காரணம் இருக்குமா? என்று போலிசார் விசரிப்பதாக தகவல். குறிப்பாக அவரது செல் போனை கைப்பற்றி அதில்சில விவரங்களை சேகரித்து வருவதாக கூறப்படுகிறது.