"மைலார்ட்" அரவிந்த் கெஜ்ரிவால் தவறாக பேசுகிறார்!  உச்சநீதிமன்றத்தில் புகார் அளித்த அமலாக்கத்துறை!

"மைலார்ட்" அரவிந்த் கெஜ்ரிவால் தவறாக பேசுகிறார்!  உச்சநீதிமன்றத்தில் புகார் அளித்த அமலாக்கத்துறை!

 ம.பா.கெஜராஜ்,

 தேர்தலில் ஆம் ஆத்மி கட்சிக்கு வாக்களித்தால்,நான் சிறைக்கு செல்ல வேண்டியதில்லை என டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தேர்தல் பிரச்சாரத்தில் பேசியிருத்ததை குறிப்பிட்டு  "இடைக்கால ஜாமீனில் வெளிவந்துள்ள அரவிந்த் கெஜ்ரிவால் இப்படிப்பட்ட கருத்துகளை சொல்லலாமா என்று அமலாக்கத்துறை உச்சநீதிமன்றத்தில் புகார் அளித்திருக்கிறது.

 அதில் "இடைக்கால ஜாமீனில் வெளியாகியுள்ள அரவிந்த் கெஜ்ரிவால் எப்படி இதுபோன்ற கருத்துகளை தெரிவிக்க முடியும்?. இது நீதிமன்றத்தை எதிர்ப்பது போன்ற செயல்" என்று அமலாக்கத் துறை தனது வாதத்தில் கடுமையாக சாட்டியுள்ளது.

 டெல்லி மதுபான கொள்கை ஊழல் வழக்கில் அமலாக்கத் துறையால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருந்த அரவிந்த் கெஜ்ரிவால் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபடுவதற்காக இடைக்கால ஜாமீன் பெற்றார். அதன்படி, ஜூன் 2-ம் தேதி சரணடைய வேண்டும் என்று நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளது.

 அப்படியிருக்க, கடந்த சில நாட்களாக தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வரும் கெஜ்ரிவால், "மக்களவை தேர்தல் முடிவுகள் ஜூன் 4-ல் வெளியாகிறது. மக்களவை தேர்தலுக்கு முன் நான் கைது செய்யப்பட்டேன். திஹார் சிறையில் எனக்கு இன்சுலின் மறுக்கப்பட்டது.

  ஜூன் 2-ம் தேதி நான் மீண்டும் சிறைக்கு செல்ல வேண்டும்.

ஜூன் 4-ல் சிறையில் இருந்தே தேர்தல் முடிவுகளை பார்ப்பேன். நீங்கள் இந்தியா கூட்டணியை வெற்றிபெற செய்ய வேண்டும். இந்தியா கூட்டணி ஆட்சிக்கு வந்தால் ஜூன் 5-ம் தேதி திஹார் சிறையில் இருந்து வெளிவருவேன். இந்த தேர்தலில் மக்கள் ஆம் ஆத்மிக்கு வாக்களித்தால், நான் சிறைக்கு செல்ல வேண்டியதில்லை" என்று பேசினார்.

 இதை சுட்டிக்காட்டியே அமலாக்கத்துறை உச்சநீதிமன்றத்தை அனுகியிருக்கிறது.