அன்புமணி-க்கு நீர்வளத்துறை பற்றி முழுமையாக தெரியவில்லை! அமைச்சர் துரைமுருகன் பேட்டி!

கு.அசோக்,
பாமக தலைவர் அன்புமணி-க்கு நீர்வளத்துறை பற்றி முழுமையாக தெரியவில்லை என்று அமைச்சர் துரைமுருகன் சொன்னார்.
இராணிப்பேட்டை மாவட்டம், வாலாஜா ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட முகுந்தராயபுரம் ஊராட்சி பகுதியில் மக்களுடன் முதல்வர் முகம் இன்று நடைபெற்றது. இந்த முகாமிற்கு இராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியர் சந்திரகலா தலைமை தாங்கினார். சிறப்பு விருந்தினர்களாக தமிழக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் மற்றும் கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் ஆ£. காந்தி ஆகியோர் பங்கேற்று பயனாளிகளுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்கள்.
தொடர்ந்து விழாவில் பேசிய அமைச்சர் துரைமுருகன், பெண்களுக்கான பல நல்ல திட்டங்களை தமிழ் நாடு முதலமைச்சர் ஸ்டாலின் செயல்படுத்தி வருகிறார். அதில் குறிப்பாக மகளிர் உரிமை தொகை, புதுமைப்பெண் திட்டம்.தற்பொழுது கல்லூரியில் படிக்கும் ஆண்களுக்கும் தமிழ் புதல்வன் என்ற திட்டத்தை துவக்கி வைத்துள்ளார்.
மக்களுடன் முதல்வர் என்ற திட்டம்தான் எனக்கு மிகப் பிடித்தமான திட்டம் என்று நான் முதலமைச்சர் ஸ்டாலின் இடமே தெரிவித்திருக்கிறேன் என்றார்.
மேலும் அமைச்சர் காந்தி பேசுகையில், தமிழ் நாடு மாநிலத்தில் கடந்த 10 ஆண்டுகளில் விட தற்போதுள்ள மூன்று ஆண்டு காலம் ஆட்சி மிகச் சிறப்பாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. மேலும் தமிழ் நாட்டு மக்களுக்கென பல நல்ல திட்டங்களை தமிழ் நாடு முதலமைச்சர் ஸ்டாலின் செய்துள்ளார் என்று பேசினார்.
நிகழ்ச்சியை தொடர்ந்து பேட்டி அளித்த அமைச்சர் துரைமுருகன் கலைஞர் நாணயம் வெளியிட்டது எங்களுக்கு பெருமையாக இருக்கிறது என்று பா.ஜ.க மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்து இருக்கிறார்.
இதில் அரசியல் உள்நோக்கம் இருக்கிறது என்று அ.தி.மு.க தெரிவித்திருக்கிறது என்ற கேள்விக்கு அவர்களுக்கு என்ன தெரியுமோ அதைச் சொல்லி இருக்கிறார்கள்.
கலைஞர் நாணயம் வெளியிட்டது என்பது மத்திய அரசு மற்றும் தமிழ் நாடு அரசு-க்கும் உள்நோக்கம் இருக்கிறது என்று அ.தி.மு.க எடப்பாடி பழனிசாமி தெரிவித்திருக்கிறார்.
எடப்பாடி பழனிசாமி சொல்வதில் தான் ஏதோ ஒரு உள்நோக்கம் இருக்கிறது. தமிழக வெற்றி கழகம் தலைவர் மற்றும் நடிகர் விஜய் தன்னுடைய கட்சியின் கொடியை இன்று அறிமுகம் செய்திருக்கிறார். இது ஜனநாயகம் நாடு இந்த நாட்டில் அனைவருக்கும் கட்சி தொடங்க, கொடி அறிமுகப்படுத்த மற்றும் கொடியேற்ற உரிமை உண்டு.
தமிழ் நாடு மாநிலத்தில் நீர்வளத்துறையில் எந்தவிதமான வளர்ச்சியும் இல்லை என்று பாட்டாளி மக்கள் கட்சி தலைவர் டாக்டர். அன்புமணி ராமதாஸ் தெரிவித்திருக்கிறார்.
டாக்டர். அன்புமணி-க்கு நீர்வளத்துறை பற்றி முழுமையாக தெரியவில்லை. தமிழ் நாட்டில் டேம் கட்டுவதற்கு இடமில்லை. எல்லா இடங்களிலும் கட்டி முடித்துள்ளோம். 48 டேம்கள் நாங்கள் கட்டி உள்ளோம் என்று அன்றைக்கே தலைவர் தெரிவித்திருந்தார். நாங்கள் தான் காவேரி மற்றும் முல்லைப் பெரியாறு பிரச்சனைகளை தீர்த்து உள்ளோம் என சொன்னார்.