தொழிற்சாலை துவங்குபவர்களை மின்வாரிய அலுவலகர்கள் அலைக்கழிப்பதாக குற்றச்சாட்டு!

தொழிற்சாலை துவங்குபவர்களை மின்வாரிய அலுவலகர்கள் அலைக்கழிப்பதாக குற்றச்சாட்டு!

ஜி.கே.சேகரன்,

 மின்வாரியத் துறையினர் தொழில் முனைவோர்களுக்கு மின் இணைப்பு மீட்டர் இல்லை, டிரான்ஸ்பார்மர் இல்லை என கூறி அலைகழிப்பதால் தொழில் முனைவோருக்கு கோடிக்கணக்கில் இழப்பு ஏற்படுகிறது - ஒற்றை சாளர முறையில் பல சிக்கல்கள் உள்ளது, ஒவ்வொன்றிற்கும் தனித்தனி அனுமதி பெற வேண்டி உள்ளது காலதாமதமும் ஏற்படுகிறது மத்திய அரசு ஓட்டல் தொழில்களுக்கும் மாணியம் வழங்க அறிவுறுத்தியும் இதுவரையில் வழங்கவில்லை - தொழில் முனைவோர்களுக்கான கூட்டத்தில் தொழிலதிபர்கள் குற்றச்சாட்டு.

 வேலூர்மாவட்டம், வேலூரில் தனியார் ஓட்டலில் சர்வதேச தொழில் முனைவோர் 2024 மண்டல அளவிலான கூட்டம் மாவட்ட ஆட்சியர் வே.இரா.சுப்பு லெட்சுமி தலைமையில் நடைபெற்றது. இதில் வேலூர், இராணிப்பேட்டை,திருப்பத்தூர்,திருவண்ணாமலை,கிருஷ்ணகிரி ஆகிய மாவட்டங்களை சேர்ந்த நூற்றுகணக்கான தொழிலதிபர்களும், தொழில் முனைவோர்களும் பங்கேற்றனர்.

  இக்கூட்டத்தில் தொழில் முனைவோர்களும் தொழிலதிபர்களும் பேசுகையில், அரசு தொழில் துவங்குவதை எளிமையாக்கவே ஒற்றை சாளர முறையை அறிமுக்கப்படுத்தியது. ஆனால் ஒவ்வொன்றுக்கும் தனித்தனி அனுமதி பெற வேண்டிய நிலை சிக்கல்களும் உள்ளது.

  ஒரு கால்வாய் இணைப்பை கட்டிடங்களுக்கு பெற வேண்டுமென்றாலும் மாநகராட்சி,தேசிய நெடுஞ்சாலை மாநில சாலை உள்ளிட்ட துறைகளை நாட வேண்டியுள்ளது. இதனால் பல கோடிகள் நஷ்டம் ஏற்பட்டு காலதாமதமாவதால் தொழில் முனைவோர் பலர் பாதிக்கபடுகின்றனர் என்றனர். 

 மேலும் திருப்பத்தூரை சேர்ந்த தொழிலதிபர் ஒருவர் பேசுகையில், சுமார் 3 கோடி முதலீடு செய்து தொழிற்சாலை துவங்க அனுமதி பெற்றும் மின்வாரியத் துறையினர் மின் மீட்டர் இல்லை, டிரான்ஸ்பார் இல்லை என இழுத்தடிக்கின்றனர், இதனால் கோடி கணக்கில் முதலீடு செய்தும் தொழில் துவங்க முடியாத நிலையில் தான் உள்ளோம் என பேசினா£. 

  இதே போன்று ராணிப்பேட்டையை சேர்ந்த தொழிலதிபர் ஒருவர் பேசுகையில் தான் மூன்று ஆண்டுகளாக வீட்டுவசதி வாரியத்துக்கு சொந்தமான இடத்தில் தொழிற்சாலையை நடத்தி வருவதாகவும், ஆனால் தற்போது அதிகாரிகள் அதனை தலித் பஞ்சமி நிலம் என கூறுவது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளதாகவும் கூறி பேசினார்.

 தொழில் முனைவோர்கள் கூட்டத்தில் தொழில் முனைவோரும் தொழிலதிபர்களும் பல்வேறு குற்றச்சாட்டுகளை கூறி பேசியதால் அதிகாரிகள் அதிர்ச்சியடைந்தனர்.