சந்திரபாபு நாயுடு  மோடியிடம் முன் வைத்த ஏழு டிமாண்ட்!

சந்திரபாபு நாயுடு  மோடியிடம் முன் வைத்த ஏழு டிமாண்ட்!

 நரேஷ். என்.

 இரண்டு நாள் பயணமாக டெல்லி சென்றுள்ள  ஆந்திர முதல் மந்திரி சந்திரபாபு நாயுடு நேற்று பிரதமர் மோடியை சந்தித்தார். அப்போது அவர் ஏழு முக்கிய கோரிக்கைகளை முன்வைத்து அவரை வலியுறுத்தியதாக கூறப்படுகிறது.

  இருவரும் 30 நிமிடங்கள் சந்தித்து பேசிய போது சந்திரபாபு நாயுடு, *ஆந்திர மாநில வளர்ச்சிக்கு அதிக அளவில் நிதி உதவி வழங்க வேண்டும்.

  *போல வரம் திட்ட கட்டுமானத்திற்கு கூடுதல் நிதி வழங்க வேண்டும்,

* தலைநகர் அமராவதியில் அரசு வளாகங்கள் மற்றும் உள்கட்டமைப்புகளுக்கு விரிவான நிதி உதவி வழங்க வேண்டும்.

*தொழில் வளர்ச்சிக்கு ஊக்கத்தொகை வழங்க வேண்டும்.

*சாலைகள், பாலங்கள் போன்ற அரசு அவசர துறைகளை கருத்தில் கொண்டு மூலதன செலவினங்களுக்கு கூடுதல் நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும்.

*பாசனம் மற்றும் குடிநீர் திட்டங்கள் நிறைவேற்ற சிறப்பு நிதி ஒதுக்க வேண்டும்.

*துகராஜப்பட்டினம் துறைமுகம் போன்ற பின்தங்கிய பகுதிகளின் வளர்ச்சிக்கு ஆதரவு அளிக்க வேண்டும் என்ற ஏழு  கோரிக்கைகளை விடுத்ததுடன், இவற்றையெல்லாம் கட்டாயம்  நிறைவேற்றி தர வேண்டும் எனவும் கேட்டு கொண்டார். 

 பிரதமரை சந்தித்த பின்னர் மத்திய மந்திரிகள் பியூஸ் கோயல், நிர்மலா சீதாராமன், நித்தின் கட்கரி, சிவராஜ் சிங் சவுகான், அமித் ஷாஆகியோரை அடுத்தடுத்து சந்தித்து பேசிவிட்டு இன்று டெல்லியில் இருந்து சந்திரபாபு நாயுடு ஆந்திரா திரும்பினார்.