மான ரோஷம் உள்ள அதிமுக தொண்டர்கள் ஏரெடுத்தும் பார்க்க மாட்டார்கள்! எடப்பாடிக்கு ஓவர் வரவேற்பு! ஹெலிகாப்டரில் மலர் தூவுகிறார்களாம்!

ம.பா.கெஜராஜ்,
எடப்பாடி பழனிச்சாமிக்கு ஓவர் வரவேற்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருக்கின்றன. ஹெலிகாப்டரில் மலர் தூவுகிறார்களாம்!மான ரோஷம் உள்ள அதிமுக தொண்டர்கள் ஏரெடுத்தும் பார்க்க மாட்டார்கள் என்று ஓ.பி.எஸ். டீமைச்சேர்ந்த மருது அழகுராஜ் பேட்டியளித்துள்ளார்.
மாநாட்டின் தொடக்க நிகழ்ச்சியாக காலை 8 மணிக்கு கொடி ஏற்றப்படுகிறது. மாநாட்டு பந்தலில் அ.தி.மு.க பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி கொடியேற்றும் போது ஹெலிகாப்டரில் இருந்து மலர்கள் தூவி வரவேற்க ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. 10 நிமிடங்கள் வானத்தில் இருந்து பூ மழையாக பொழிய சென்னை மாவட்ட செயலாளர்கள் பால கங்கா, வெங்கடேஷ் பாபு, விருகை வி.என்.ரவி, தி.நகர் சத்யா, ஆர்.எஸ்.ராஜேஷ் ஆகியோர் சிறப்பு வரவேற்பு ஏற்பாடு செய்துள்ளனர்.
பின்னர் மாலை 4 மணிக்கு மீண்டும் எடப்பாடி பழனிசாமி மாநாட்டு நிகழ்ச்சியில் பங்கேற்க வரும் போது ஹெலிகாப்டரில் இருந்து மலர் தூவி வரவேற்க திட்டமிடப்பட்டு உள்ளது.
எடப்பாடி பழனிசாமி தங்கி இருக்கும் ஓட்டலில் இருந்து அவர் வெளியே புறப்பட்டு மாநாட்டு பந்தலுக்கு வரும் வரையில் அவரது காருக்கு மேலே ஹெலிகாப்டர் பறந்தவாறு மலர்களை தூவியவாறு வந்து கொண்டே இருக்கும். இது போன்ற வரவேற்பு ஏற்பாடுகள் முதன் முதலாக அ.தி.மு.க.வினர் செய்திருப்பது குறிப்பிடத்தக்கது.
காலையில் 10 நிமிடமும் மாலையில் 10 நிமிடமும் ஹெலிகாப்டரில் இருந்து எடப்பாடி பழனிசாமிக்கு மலர்களை தூவி வரவேற்பது கொஞ்சம் ஓவர் தான் என்கிறார்கள் மக்கள்.
மக்களவை தேர்தல் நெருங்கவுள்ள நிலையில் தனது பலத்தை நிரூபிக்க மதுரையில் பிரம்மாண்ட மாநாட்டிற்கு எடப்பாடி பழனிசாமி ஏற்பாடு செய்துள்ளார்.
வரலாறு காணாத அளவிற்கு பிரம்மாண்டம். தொடர் ஜோதி ஓட்டம், மெகா அரங்கு, சிறப்பு சீருடையுடன் கூடிய அதிமுக படை, எடப்பாடிக்கு தொண்டர்கள் படையின் ராயல் வரவேற்பு, சென்னையில் இருந்து சிறப்பு ரயிலில் 1,500 பேர், 15 லட்சம் பேருக்கு எதிர்பார்ப்பு, ஜெயிலர் பட டிக்கெட் கொடுத்து ஆள்பிடி சம்பவங்கள், அறுசுவை விருந்து, ஹெலிகாப்டரில் இருந்து பூ மழை, டிஜிட்டல் திரைகள், மாநாட்டிற்கு செல்ல சிறப்பு வழித்தடங்கள், 51 அடி உயர கொடிக் கம்பம், இசை நிகழ்ச்சி, பேச்சு அரங்கம் என லிஸ்ட் நீண்டு கொண்டே செல்கிறது.
இந்நிலையில் தான் ஓ.பன்னீர்செல்வத்தின் ஆதரவாளரான மருது அழகுராஜ் செய்தியாளர்களிடம் பேசுகையில், மதுரை மாநாட்டிற்கு சிவகங்கையில் இருந்து மான ரோஷம் உள்ள அதிமுக தொண்டர்கள் ஏரெடுத்தும் பார்க்க மாட்டார்கள்.
ஒருவேளை பதவிக்கு ஆசைபட்டு, பதவியை தக்க வைக்க, பணப்பட்டுவாடாவிற்கு மயங்கியும், இவர்களின் வற்புறுத்தலின் பேரிலும் சிலர் செல்லலாம். அப்படி நடந்தாலும் மதுரை மாநாட்டையே உரிமை கேட்கும் ஆர்ப்பாட்டமாக மாற்றுவதற்கு வாய்ப்புள்ளது.
வட மாவட்டங்களில் இருந்து சி.வி.சண்முகம் மூலமும், சேலத்தில் இருந்து இளங்கோவன் மூலமும் மாநாட்டிற்கு ஆட்கள் அழைத்து வரப்படுகின்றனர். இவர்களுக்கு சிறப்பு பேட்ச்கள் அளித்து முன் வரிசையில் அமர வைக்கப்படுவர்.
எடப்பாடி பழனிசாமிக்கு எதிரான கோஷங்கள் யாராவது எழுப்பினால், அது அவரது காதுகளுக்கு செல்லாமல் பார்த்து கொள்வர்.
தமிழக அரசியலில் வலுவான வாக்கு வங்கி மற்றும் கூட்டணியுடன் திமுக முதலிடத்தில் உள்ளது. இரண்டாம் இடத்தில் இருக்கும் அதிமுக இரண்டு, மூன்றாக பிளவுற்று கிடக்கிறது. மூன்றாவது இடத்தில் இருப்பதாக பாஜக கற்பனை செய்து கொண்டிருக்கிறது. அதிமுக தொடர்ந்து பிளவுபட்டு கொண்டே இருந்தால், நாம் இரண்டாம் இடத்திற்கு சென்று அப்படியே முதலிடத்தில் தாவலாம் என கனவு கோட்டை கட்டி வருகிறது.
இதேபோல் அதிமுக பிளவுற்று கிடந்தால் தான் ஆட்சியை தக்க வைத்து கொள்ள முடியும் என்று திமுக கருதுகிறது. இவ்வாறு திமுக, பாஜக நினைப்பதை நிறைவேற்றும் இடத்தில் தான் எடப்பாடி பழனிசாமி இருக்கிறார். எனவே உண்மையான அதிமுக தொண்டர்கள் மதுரை மாநாட்டிற்கு செல்ல வேண்டாம். ஒருவேளை கட்டாயப்படுத்தி அழைத்து சென்றால் எடப்பாடியின் முன்னால் நின்று எதற்காக கட்சியை உடைத்தாய் எனக் கேளுங்கள்.
மாநாட்டு களத்தை ஆர்ப்பாட்டாக களமாக மாற்றுங்கள். கட்டபொம்மனுக்கு ஒரு எட்டப்பன் போல, எடப்பாடிக்கு செல்லூர் ராஜூ, ராஜன் செல்லப்பா, ஆர்.பி.உதயகுமார் என மதுரையில் மூன்று எட்டப்பன்கள். இவர்கள் தங்கள் எம்.எல்.ஏ பதவியை ராஜினாமா செய்துவிட்டு மீண்டும் வெற்றி பெற்று காட்டட்டும். அதன்பிறகு நாங்கள் ஒத்து கொள்கிறோம். நீங்கள் வெற்றி பெற்றுவிட்டதாக என்று மருது அழகுராஜ் சவால் விடுத்துள்ளார்.
ஆக எடபாடி மாநாட்ட்டுக்கு கூடுதல் பாதுகாப்பு இருக்கும்.