பொதுமக்களுக்கான தண்ணீர் லாரிக்கு 300 லிட் டீசல்! நகராட்சி தலைவர் வண்டிக்கு 1535 லிட்டர் டீசலா? சமூக போராளி கேள்வி பதில்!

உ.சசிக்குமார்,
வேலூர் மாவட்டம் பேர்னாம்பட்டில் உள்ள யூனுஸ் என்பவர் சமூக போராளியாக செயல்பட்டு வருகிறார். அவர் சமூக பிரச்சனை பலவற்றுக்கு வித்தியாசமான முறையில் தீர்வு காணுவது வாடிக்கை. அந்த வகையில் தற்போது நகரமன்ற ஊழல் சிலவற்றை சுட்டிக்காட்டி கேள்வி பதிலாக போட்டுத் தள்ளியிருக்கிறார்.
அதன் விவரம் வருமாறு,
பேர்ணாம்பட்டு பொது மக்களுக்கு மீண்டும் ஒரு கேள்வி பதில் நிகழ்ச்சி
கேள்வி:-பேர்ணாம்பட்டு நகராட்சி வாகணங்களுக்கான டீசல் எந்த பெட்ரோல் பங்கில் கொள்முதல் செய்கிறார்கள் என்பதை விளக்கவும்.
பதில்:-நவம்பர் மாதம் 2021 வரை சந்திரநாத் பெட்ரோல் நிலையம் பாரத் பெட்ரோல் நிலையத்தில் கொள்முதல் செய்தார்கள்.
இந்த பெட்ரோல் பங்கில் நகராட்சி சார்பில் லட்சக்கணக்கில் டீசல் போலி போட்டு வந்ததை அன்றைய ஆணையாளர் திருமதி சசிகலா கண்டுபிடித்து இந்த பெட்ரோல் பங்கில் டீசல் கொள்முதல் செய்வதை நிறுத்தி விட்டார்கள். டிசம்பர் மாதம் 2021 முதல் ஸ்ரீ சந்திர பிரசன்னா சென்டர் (இந்தியன் பெட்ரோலியம்) முதல் டீசல் கொள்முதல் செய்தார்கள். இதில் ஒரு மாதம் பில் தொகை கீழே குறிப்பிட்டுள்ளபடி ஆகும்
31/1/2022 செக் நம்பர் 142315, ரூ.1,76,089.00/- இவை (இரண்டு லாரிகள் மூன்று குட்டி யானை வண்டிகள் குப்பை டிராக்டர் -1 குடிநீர் வாகனம் - 2.) ஆகியவற்றுக்கு ஆகும்.
தற்போது புதியதாக ஜூன் 21.6.2023 முதல் எஸ்.எஸ் பெட்ரோல் பங்கில் டீசல் கொள்முதல் செய்கிறார்கள்.
21.06.2023 முதல் 30.6.2023 வரை பில் தொகை ரூபாய் 49,816/-.அதாவது 518 லிட்டர் ஆகும்.
518 லிட்டர் டீசல் எப்படி செலவானது அதன் விவரம் வருமாறு,
தண்ணீர் டிராக்டர் - 118 லிட்டர்கள், ஆணையாளர் வாகனம் -100 லிட்டர்கள்
நகர மன்ற தலைவியின் வாகனத்திற்கு - 300 லிட்டர்கள் டீசல் செலவு செய்தார்கள்.
கேள்வி : நகரமன்ற தலைவர் திருமதி பிரேமா வெற்றிவேல் அவர்கள் 300 லிட்டர் டீசல் எந்த பணிக்கு செலவு செய்தார்கள் என்பதை விளக்கவும்.
பதில்:- அரசு வாகனம் அரசு பணிக்கு மட்டும் தான் பிரயாணம் செய்ய வேண்டும் ஆனால் பொது மக்களின் வரிப்பணத்தை நகரமன்ற தலைவி அவர்கள் சொந்த பணிக்காக செல்வது இவர்களின் கொள்கையும் நகராட்சி நிதி வளத்தை போலி பில் போட்டு பணத்தை கையாளர்கள் செய்வது செய்து வருவது இவர்களின் கடமை கண்ணியம் கட்டுப்பாடு ஆகும்.
கேள்வி:- 01.07/2023 முதல் 31.07.2023 வரை டீசல் கொள்முதல் செய்தது எவ்வளவு என்பதை விளக்கவும்
பதில்:- 01.07.2023 முதல் 31.7.2023 வரை எஸ்.எஸ் பெட்ரோல் பங்கில் பேர்ணாம்பட்டு நகராட்சி கொள்முதல் செய்த தொகை ரூபாய் ஒரு லட்சத்து 57 ஆயிரம் (1,57,000/-) சுமார் 1535 லிட்டர் டீசல் ஆகும்.
இதில் குடிநீர் டிராக்டருக்கு 300 லிட்டர்கள் ஆணையாளர் வாகனத்திற்கு 235 லிட்டர்கள் மீதி 1100 லிட்டர்கள் நகர மன்ற தலைவியின் அரசு வாகனத்திற்கு செலவு செய்யப்பட்டது. சுமார் 16,500 கிலோ மீட்டர் அளவிற்கு சுற்றுலா செல்வதற்கு பொதுமக்களின் வரிப்பணம் வீணடிக்கப்பட்டிருக்கிறது.
கேள்வி:- நகர மன்ற தலைவர் அவர்கள் 1100 லிட்டர்கள் டீசல் மோசடி செய்த சம்பந்தமாக யாரிடம் புகார் அளிப்பீர்?.
பதில்:- நகராட்சியின் நிதியை சட்ட விரோதமாக பயன்படுத்திய, சுமார் 1100 லிட்டர்கள் டீசல் கட்டணத்தை திருமதி பிரேமா வெற்றிவேலிடம் தான் வசூல் செய்து எஸ் எஸ் பெட்ரோல் நிறுவனத்திற்கு பணம் செலுத்த வேண்டும் என்று நகராட்சி ஆணையாளர் அவர்களை கேட்டுக்கொள்வதுடன், வேலூர் காகிதப்பட்டரையில் உள்ள ரீஜினல் டைரக்டரேட் ஆஃப் முனிசிபல் அட்மினிஸ்ட்ரேஷனில் புகார் அளிக்கப்படும். அடுத்த கட்டம் நீதிமன்றம் தான்.
அதேபோல் பொதுமக்களுக்கு ஒரு அன்பான வேண்டுகோள்!! பேர்ணாம்பட்டு நகர மன்றத்தில் நடைபெற்று வரும் ஊழல் லீலைகளை பற்றி லஞ்ச ஒழிப்பு துறைக்கு மற்றும் தமிழக ஆளுநர் அவர்களுக்கு ஆயிரம் புகார்கள் உள்நாட்டு தபால் தாளில் பிரிண்ட் செய்து தருகிறேன் என்று அந்த சமூக போராளி தெரிவித்துள்ளார்.
Note;-
July 1.07.2023 to 31.07.2023
147000 municipal purchases from S S fuel center 16.06.2023 ₹ 49816
Chandra Prasanna fuels Purches date
01 01 2022 check no/142315. ₹ 176089.00
23.03.2022/ check no ₹347612.00
19.07.2022 check no 864873 ₹458572
14.07.2022 check no.₹ 453308
22.12.2022 check no ₹ 475399.00