செட்டிபாளையம் பகுதியில் கஞ்சா பறிமுதல்2 நபர்கள் கைது!

ஜே.அருண் ஹென்றிக்ஸ்,
கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. பத்ரிநாராயணன், இ.கா.ப., அவர்கள் உத்தரவின் பேரில் கஞ்சா ஒழிப்பு பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது.
அதன் அடிப்படையில் செட்டிபாளையம் பகுதியில் கஞ்சாவை விற்பனைக்கு வைத்திருப்பதாக கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் கோவை மாவட்ட தனிப்படை காவல் உதவி ஆய்வாளர் மற்றும் காவல்துறையினர் சம்பவ இடமான செட்டிபாளையம் அம்பாள் நகர் பகுதிக்கு விரைந்து சென்று சோதனை மேற்கொண்டார்.
அப்போது கஞ்சாவை வைத்திருந்த ஈரோடு மாவட்டத்தை சேர்ந்த கணேசன் மகன் கோகுல் (22) மற்றும் திருச்சி மாவட்டத்தை சேர்ந்த கிருஷ்ணசாமி மகன் கோகுல்(22) ஆகிய 2 நபர்களை கைது செய்தனர்.
பின்னர் அவர்களிடமிருந்து 1.100 கிலோ கிராம் எடையுள்ள கஞ்சாவை பறிமுதல் செய்து, மேற்படி நபர்களை நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தினர்.