போலி மருத்துவர்கள் 10 பேர் கைது!

க.பாலகுரு,
திருவாரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுரேஷ்குமார் உத்தரவின் பேரில் திருவாரூர் மாவட்டத்தில் 10 போலி மருத்துவர்கள் அதிரடியாக கைது.
திருவாரூர் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் மருத்துவம் படிக்காமல் பொதுமக்களுக்கு மருந்துகள் மாத்திரைகள் கொடுப்பது ஊசி போடுவது என போலியாக மருத்துவராக செயல்பட்டு வந்த நபர்களை கைது செய்ய திருவாரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுரேஷ்குமார் உத்தரவிட்டார்.
அதன்படி அமைக்கப்பட்ட தனிப்படை காவல்துறையினர் மாவட்டம் முழுவதும் பல்வேறு இடங்களில் சோதனை செய்து 10-க்கும் மேற்பட்ட போலி மருத்துவர்கள் கைது செய்தார்கள்.
அதன்படி மாவட்டம் முழுவதும் செந்தில் சிவகுமார் மாரியப்பன் கல்யாண சுந்தரம் ராஜேந்திரன் சிவகுருநாதன் சிவசுப்பிரமணியன் சவுரிராஜ் குமார் துரைராஜ் உள்ளிட்ட 10 போலி மருத்துவர்கள் அதிரடியாக கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்கள்.