என்ன செய்தார் எங்க எம்.பி.? நாகப்பட்டினம் (த) தொகுதி!

என்ன செய்தார் எங்க எம்.பி.? நாகப்பட்டினம் (த) தொகுதி!

க.பாலகுரு,

 நாடாளுமன்ற உறுப்பினர் எம்.செல்வராஜ், கட்சி; இந்திய கம்யூனிஸ்ட் கட்சி( திமுக கூட்டணி) எம்பி செல்வராசு:

பழகுவதற்கு எளிமையானவர் இனிமையானவர் என பெயர் எடுத்த நாகை தொகுதியின் எம்.பி  1989 ஆம் ஆண்டு அதிமுக காங்கிரஸ் கூட்டணியில் 38 தொகுதிகளையும் கைப்பற்றியது திமுக கூட்டணியில் செல்வராசு நாகை நாடாளுமன்ற கழக தொகுதியை கைப்பற்றினார். வி.பி.சிங் பிரதமராக இருந்த சமயத்தில் மண்டல் கமிஷன் ஆதரவாக வாக்களித்தவர். இதுவரை ஏழு முறை போட்டிட்டு நான்கு முறை வெற்றி பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. வெற்றி பெற்றது முதல் இன்று வரை நன்றி தெரிவிப்பதற்கு கூட தொகுதியின் பக்கம் வராதவர் என்று பெருவாரியான மக்கள் தெரிவிக்கின்றனர்.

  நாகை நாடாளுமன்ற தொகுதி விவரம்...

நாகை பாராளுமன்றத் தொகுதியில், இதுவரை காங்கிரஸ் 5 முறையும், இந்திய கம்யூனிஸ்ட் 7 முறையும், திமுக 4 முறையும், அதிமுக 2 முறையும் வெற்றி பெற்றுள்ளன.

 2019 ஆம் ஆண்டு நாகை மக்களால் நாடாளுமன்றத்துக்கு அனுப்பிவைக்கப்பட்ட எம்.செல்வராஜ், "இதுவரை நாடாளுமன்றத்தில் மக்கள் நலனுக்காக  400- க்கும் மேற்பட்ட கேள்விகளை எழுப்பி இருப்பதோடு மக்கள் பிரச்சனைகளை தீர்த்த மனநிறைவு இருப்பதாக கூறுகிறார்"  அதன் மூலம் பல பணிகள் தொகுதியில் செய்து முடிக்கப்பட்டிருப்பதாகவும் சொல்கிறார்.

 அப்படி என்னதான் செய்தார் நாகை நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராசு என்பதை பற்றி விரிவாக விவரிக்கிறது இந்த செய்தி தொகுப்பு...!

 காவிரி டெல்டாவின் கடை கோடி பகுதியாகவும் பொருளாதாரம் மற்றும் சமூக அடுக்குகளில் மிகவும் பின்தங்கிய மாவட்டமாகவும்  நாகப்பட்டினம் அமைந்துள்ளது.  இங்கு பிரதான தொழிலாக  விவசாயம் மற்றும் மீன்பிடித் தொழிலாக உள்ளது. அதிலும் குறிப்பாக அதிக அளவிலான விவசாய கூலித் தொழிலாளர்களை  நிறைந்திருக்கக் கூடிய தொகுதியாகும். பட்டியல் சாதியினர் மற்றும் பழங்குடியினர் போன்றவருக்காக ஒதுக்கப்பட்ட தனி தொகுதியாகும்.

  நாகப்பட்டினத்தில் நாகூர் பட்டினச்சேரி தொடங்கி வேதாரண்யம் கோடியக்கரை வரை 25க்கும் மேற்பட்ட மீனவ கிராமங்களை உள்ளடக்கிய நீண்ட கடற்கரை கொண்ட தொகுதி. பட்டியல் இன மக்களுக்கு அடுத்தபடியாக இஸ்லாமியர்கள்,முக்குலத்தோர் வன்னியர், பிள்ளை சமூகத்தினர்  இந்த தொகுதியில் அதிகம் உள்ளார்கள்.

 அரசியல் ரீதியாக முக்கியத்துவம் வாய்ந்த இந்த தொகுதியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு குறிப்பிடத்தக்க அளவு வாக்கு வங்கி உண்டு. நீண்டகாலமாகவே இந்த தொகுதியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியும், திமுகவும் மாறி மாறி வென்றுள்ளன.

  திமுக கூட்டணியில் இந்திய கம்யூனிஸ்ட் இருந்தபோது கூடுதல் வாக்கு வித்தியாசத்துடன் வென்றுள்ளது.

  இந்து,முஸ்லிம், கிருஸ்துவ என மூன்று மதத்தை ஒன்றிணைக்க கூடிய மற்றும் மத நல்லிணக்கத்திற்கு எடுத்துக்காட்டாக விளங்கும் நாகை மாவட்டத்தில் நாகூரில் ஆண்டவர் தர்கா, வேளாங்கண்ணியில் புனித ஆரோக்கிய அன்னை பேராலயம், எட்டுக்குடி சிக்கலில் முருகன் கோயில்கள், நாகையிலேயே நீலாயதாட்சியம்மன் கோயில் கோடியக்கரையில் ராமர் பாதமைத்த இடம் என பலவற்றை குறிப்பிடலாம். அதுமட்டுமின்றி ஆசியாவிலேயே மிகப் பெரிய  தேர் எனப்படும் திருவாரூர் தியாகராஜ சுவாமி கோயில் தேர் என பல்வேறு தனி சிறப்பு கொண்டுள்ளது நாகை நாடாளுமன்ற தொகுதி.

சட்டமன்ற தொகுதிகள்:

1) நாகப்பட்டினம்

2) வேதராண்யம்

3) கீழ்வேளூர்(தனி)

4) திருவாரூர்

5) திருத்திரைப்பூண்டி (தனி)

6) நன்னிலம்

தேர்தல் வாக்குறுதிகள்;

  1. நாகப்பட்டினம், அக்கரைப்பேட்டை ரயில்வே மேம்பாலம்
  2. மரைன் இன்ஜினியரிங் தொடர்பான கல்லூரி அமைத்தல்
  3. மழை நீர் ஆறுகள் வழியாக பயனற்று கடலில் கலப்பதை தடுக்க தடுப்பணை கட்டுதல்
  4. நாகூர் ஆண்டவர் அரசு மருத்துவமனையை மேம்படுத்தி உயர் சிகிச்சை வழங்குதல்
  5. வலங்கைமானில் காகித தொழிற்சாலை அமைத்தல்
  6. திருத்திறைப்பூண்டியில்புதிய பேருந்து நிலையம் அமைத்தல்
  7. திருவாரூரில் வெளிவட்ட சாலை அமைத்தல்
  8. சென்னை பெட்ரோலியம் கெமிக்கல் லிமிடெட் நிறுவனத்தின் சுத்தகரிப்பு நிலையம் அமைத்தல்
  9. கடலோர பகுதிகளில் தூண்டில் வளைவு துறைமுகம் அமைத்தல்

     10 திருத்திரைப்பூண்டி - அகஸ்தியன்பள்ளி அகல ரயில் சேவை மீண்டும் தொடங்குதல்

  1. திருவாரூர், காரைக்குடி ரயில் சேவை தொடங்குதல்
  2. நாகப்பட்டினம் மருத்துவக் கல்லூரி மருத்துவனை திறப்பு

நிறைவேற்றிய வாக்குறுதிகள்

1) திருத்திரைப்பூண்டி - அகத்தியான்பள்ளி ரயில் சேவை மீண்டும் தொடக்கம்

2) திருவாரூர்- காரைக்குடி ரயில் சேவை மீண்டும் தொடக்கம்

3.) தஞ்சாவூர் டூ நாகப்பட்டினம் தேசிய நெடுஞ்சாலை பணிகள் முடிவடையும் தருவாயில் உள்ளது.

4) நாகப்பட்டினம் -இலங்கை இடையிலான பயணிகள் கப்பல் சேவை தொடக்கம்

5) சென்னை பெட்ரோலியம் கெமிக்கல் லிமிடெட் நிறுவனத்தின் சுத்தகரிப்பு நிலையம் கொண்டு வந்துள்ளார்

6) மூன்று மீனவ கிராமங்களில் துண்டில் வளைவு துறைமுகம் அமைத்து கொடுத்துள்ளார்

7) நாகப்பட்டினம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை உடனடியாக செயல்பாட்டுக்கு கொண்டு வந்தார்.

நிறைவேற்றாத வாக்குறுதிகள்

1) மழை நீர் வீனாவதை தடுக்க ஆறுகளில் தடுப்பனை கட்டவில்லை

2) மரைன் இன்ஜினியரிங் தொடர்பான கல்லூரி கட்டித் தரவில்லை

3) நாகப்பட்டினம்- அக்கரைப்பேட்டை ரயில்வே மேம்பாலம் அமைக்கவில்லை

4) நாகூர் ஆண்டவர் அரசு மருத்துவமனையை மேம்படுத்தவில்லை

5) வலங்கைமானில் காகித தொழிற்சாலை அமைக்கவில்லை

6) திருத்திரைப்பூண்டி புதிய பேருந்து நிலையம் அமைக்கவில்லை

7) திருவாரூர் வெளிவட்ட சாலை அமைக்கவில்லை

 நாகை நாடாளுமன்றத்தில் முக்கிய தேவைகள்

1) மீன் பதப்படுத்தும் தொழிற்சாலை

2) உப்பு ஏற்றுமதி செய்வதற்கான வசதி

3) ஆறுகளில் தடுப்பணைகள் கட்டுதல்

4) விவசாயத்தை பாழ்படுத்தும் இரால் பண்ணைகளை கட்டுப்படுத்தி ஒழுங்குப்படுத்துல்

5) திருப்பூர் , கோவை போன்று இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பை கொடுக்கும் ஆயத்த ஆடை தொழிற் நிறுவனங்களை ஏற்படுத்துதல்

6) பழச்சாறு தயாரிக்கும் தொழிற்சாலை நிறுவதல்

7) கடலோர கிராமங்களில் நிலவும் குடிநீர் பிரச்சனைக்கு தீர்வு ஏற்படுத்துதல்

8) நாகப்பட்டினம் துறைமுகத்தில் வணிக கப்பல் போக்குவரத்து சேவை தொடங்குதல்

9) கிடப்பில் கிடக்கும் நாகை - திருக்குவளை - திருத்திரைப்பூண்டி ரயில் பாதை தொடங்குதல்

10) கீழ்வேளூரில் பேருந்து நிலையம் கட்டுதல், கீழ்வேளூர் ரயில் நிலையத்தில் தொலை தூர ரயில்கள் நின்று போக வழிவகை செய்தல்

11) நெல் மூட்டைகளை பாதுகாக்க ஒவ்வொரு பகுதிகளிலும் குடோன்களை கட்டுதல்

 

இதுவரை இந்தத் தொகுதியில் மக்களவை உறுப்பினர்களாக இருந்தவர்களின் பட்டியல்:

 1957 - அய்யாகண்ணு மற்றும் சம்பந்தம் - காங்கிரசு

1962 - கோபால்சாமி - காங்கிரசு

1967 - சாம்பசிவம் - காங்கிரசு

1971 - காத்தமுத்து - சிபிஐ

1977 - எசு.ஜி. முருகையன் - சிபிஐ

1979- கே.முருகையன் -சிபிஐ

1980 - தாழை.மு. கருணாநிதி - திமுக

1984 - மகாலிங்கம் - அதிமுக

1989 - செல்வராசு - சிபிஐ

1991 - பத்மா - காங்கிரசு

1996 - செல்வராசு - சிபிஐ

1998 - செல்வராசு - சிபிஐ

1999 - ஏ. கே. எஸ். விஜயன் - திமுக

2004 - ஏ. கே. எஸ். விஜயன் - திமுக

2009 - ஏ. கே. எஸ். விஜயன் - திமுக

2014 - கோபால் - அதிமுக

2019 - எம்.செல்வராசு - சிபிஐ

 கடந்த 2019 ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் திமுக கூட்டணியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி  எம்.செல்வராசு 5,22,892

தாழை சரவணன் 3,11,539 இரண்டாம் இடம்

இதில் இந்திய பொதுவுடமைக் கட்சி வேட்பாளர் ம. செல்வராசு, அதிமுக வேட்பாளரான, சரவணனை 2,09,349 வாக்குகள் வேறுபாட்டில் வென்றார்.

 

வாக்காளர் விவரங்கள்:

மொத்த வாக்காளர்கள்: 13, 38,459

ஆண்கள்: 6,70,128

பெண்கள்:5,31,789

மூன்றாம் பாலினத்தவர்கள்: 179