நாயுடு பதவியேற்பு விழாவில் தமிழிசையை விரல் நீட்டி என்ன சொன்னார் அமித் ஷா!

நாயுடு பதவியேற்பு விழாவில் தமிழிசையை விரல் நீட்டி என்ன சொன்னார் அமித் ஷா!

 வி.டி.வித்யாசாகர்,

 ஆந்திர மாநில முதல்வராக சந்திரபாபு நாயுடு பதவியேற்று கொண்டார். இந்த நிகழ்வில் பிரதமர் மோடி, அமித்ஷா, வெங்கய்யா நாயுடு, தமிழிசை  உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்ட தமிழிசை சௌந்தர்ராஜன் மேடையில் உள்ளவர்களுக்கு வணக்கம் வைத்துக் கொண்டே சென்றார். அப்போது அமித் ஷா தமிழிசையை அழைத்து ஏதோ பேசினார்.

  தமிழிசை அதற்கு விளக்கம் அளிப்பது  ஏதோ சொல்ல வர அதை கேட்க மறுத்து அமித்ஷா காட்டமாக விரல் நீட்டி பேசினார்.

 சமீபத்தில் தமிழிசை சௌந்தர்ராஜன் தமிழக பாஜக அமைத்த வியூகம் சரியில்லை என்றும் அதனால் தான் மக்களவை தேர்தலில் தோல்வியடைந்தோம் என்றும் கூறியிருந்தார். இதனால் அண்ணாமலை ஆதரவாளர்களும், தமிழிசை ஆதரவாளர்களும் சமூக வலைதளங்களில் மோதிக்கொண்டனர்.

 தமிழிசை ஆளுநர் பதவிகளை ராஜினாமா செய்துவிட்டு அரசியல்  களத்தில் இறங்கியிருப்பதே இந்த மோதல் ஏற்படுவதாக காரணம் என்று கூறப்படுகிறது.