கொடியிலே பிறந்தோம் கொடியிலே வளர்ந்தோம் கொடியிலே தான் இறப்போம்! புகழேந்தி உணர்ச்சிகரம்!

கொடியிலே பிறந்தோம் கொடியிலே வளர்ந்தோம் கொடியிலே தான் இறப்போம்! புகழேந்தி உணர்ச்சிகரம்!

 உ.சசிகுமார்,

அதிமுக கொடி தொடர்பாக ஓபிஎஸ் ஆதரவாளரான புகழேந்தி, செய்தியாளர்களிடம் உணர்ச்சி பூர்வமாக பேசினார்.    செய்தியாளர்களிடையே அவர் பேசுகையில், ஓ.பன்னீர்செல்வம் கழக ஒருங்கிணைப்பாளர் என்று குறிப்பிட்டு கட்சியின் கொடியை அவர் பயன்படுத்தக் கூடாது என்று தடை போட்டிருக்கிறார்கள்.

 அதனால் நீதிமன்றத்திற்கு மரியாதை அளித்து உடன்பட்டு நடக்கிறார். அமைதியான தலைவர். ஜெயலலிதாவின் வழி வந்தவர். என்னை எல்லாம் யாரும் தடை செய்யவே முடியாது. கொடியிலே தான் பிறந்தோம். கொடியிலே தான் வளர்ந்தோம். கொடியிலே தான் இறப்போம். எவன் சொன்னாலும் கேட்க மாட்டோம். இதற்காக சிறைக்கு போகவும் நாங்கள் தயார்.

 கழகத்தின் சார்பில் பூத் கமிட்டி கூட்டங்கள் அனைத்து மாவட்டங்களிலும் படிப்படியாக நடத்தப்படும்.

குளிர்கால உபகரணங்களின் விழா-ரூம் ஹீட்டர்கள், கீசர்கள், மிக்சர் கிரைண்டர்கள் மற்றும் பலவற்றில் குறைந்தபட்சம்    

இவை அனைத்தும் அதிமுக பேனரில் தான் நடைபெறும். இதில் எந்தவித மாற்றமும் இல்லை. எடப்பாடி பழனிசாமி இந்த கழகத்தை ஒழித்து கட்ட முடிவு செய்துவிட்டார் என்ற நிலை உறுதியான பிறகு தான் எங்களின் பயணம் உத்வேகத்துடன் ஆரம்பித்துள்ளது.

   நாங்கள் வெளியில் வரவில்லை என்ற பேச்சு தொடர்ந்து ஒலித்து கொண்டிருந்தது. அதற்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டு விட்டது. எங்கள் அணி கழகத்தினர் மத்தியிலும், மக்கள் மத்தியிலும் நிச்சயம் எழுச்சியை ஏற்படுத்தும்.

    எடப்பாடி பழனிசாமி தலைமையில் சந்தித்த எந்த ஒரு தேர்தலிலும் வெற்றி கிடைக்கவே இல்லை. ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் வரை கண்கூடாக பார்க்கலாம். வரும் 2024 மக்களவை தேர்தலில் நாங்கள் போட்டியிடுகிறோம். அப்போது உண்மையான சக்தி யார் என்பது தெரிந்துவிடும். வந்து கைகோருங்கள் என்று ஓ.பன்னீர்செல்வம் பலமுறை அழைத்து விட்டார். ஆனால் ஒருமுறை கூட கேட்கவில்லை. கட்சி வீணாக போய்விடும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டது.

   கட்சியின் ஒற்றுமையில் சிறிதும் அக்கறை இல்லாதவர் தான் எடப்பாடி பழனிசாமி என்று குறிப்பிட்டார்.

    எடப்பாடி பழனிசாமி கூட்டத்தின் மீது மட்டும் ஸ்டாலின் எந்த நடவடிக்கையும் எடுக்க மாட்டாரா? 4,500 கோடி ரூபாய் ஊழல் நடந்திருக்கிறது. எடப்பாடி சிறைக்கு செல்லும் நாளிற்காக காத்திருக்கிறோம். நாங்கள் ஆட்சியில் இருக்கும் போது அவர் சிறைக்குள் இருப்பார் என்று புகழேந்தி காட்டமாக சொன்னார்.