மாமுல் மேட்டரை கொலை முயற்சி என திசை திருப்பும் விஏஓக்கள்!

மாமுல் மேட்டரை கொலை முயற்சி என திசை திருப்பும் விஏஓக்கள்!

 ம.டெல்லிராஜன்,

  மாமுல் மேட்டரால் எழுந்த பிரச்சனையை விஏஓக்கள் திசைதிருப்புவதாக கூறப்படுகிறது.  கடந்த அக்.13-ம் தேதி, பழநி அருகேயுள்ள கிழக்கு ஆயக்குடியில்  மண் திருட்டை தடுக்க சென்ற கிராம நிர்வாக அலுவலர்கள் உட்பட 3 பேர் மீது பாலசமுத்திரம் பகுதியைச் சேர்ந்த செங்கல் சூளை உரிமையாளர் சக்திவேல், பழநியை சேர்ந்த பாஸ்கரன், லாரி உரிமையாளர், ஓட்டுநர் உள்ளிட்டோர் கொலை முயற்சியில் ஈடுபட்டனராம். ஆகவே அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி, விஏஓ கருப்புசாமி தலைமையிலான விஏஓக்கள் ஆயக்குடி காவல் நிலையத்தில் புகார் கொடுத்தனர்.

 பின்னர்  திமுக நிர்வாகிகளான சக்திவேல், பாஸ்கரன், லாரி உரிமையாளர் உட்பட 6 பேர் மீது கொலை முயற்சி, அரசு அதிகாரிகளை பணி செய்யவிடாமல் தடுத்தல், சட்டவிரோத மண் திருட்டு உட்பட 4 பிரிவுகளின் மீது போலீஸார் வழக்குப்பதிவு செய்து, 6 பேரையும் தேடி வந்த நிலையில், பழநியைச் சேர்ந்த செங்கல் சூளை உரிமையாளர் மற்றும் திமுக நிர்வாகியான சக்திவேல்  அவரது மகன் காளிமுத்து, திமுக நெசவாளர் அணி மாவட்ட அமைப்பாளர் பாஸ்கரன்  ஆகியோரை ஆயக்குடி போலீஸார் கைது செய்தனர். மேலும் தலைமறைவாக உள்ள 3 பேரை தனிப்படை அமைத்து தேடி வருகின்றனர்.

இது குறித்து விசாரித்த போது சம்மந்தப்பட்ட இடத்தில் மண் திருட்டு பலகாலமாக நடந்து வருகிறது. அதற்கு அதிகாரிகளும் உடந்தை. ஆனால் மாமுல் மேட்டரால் வாய்தகறாறு ஏற்பட்டு இருதரப்புக்கும் பெரிய பிரசனையாகிவிட்டது. அதன் பின்னர் தான் எங்களை பணி செய்யவிடாமல் தடுத்து கொலை செய்ய முற்பட்டார்கள் என புகார் அளித்தனர்.

  இந்த விவகாரம் குறித்து திண்டுக்கல் ஆட்சியர் விசாரித்தால் உண்மை தெரியவரும் என்கிறார்கள்.