சார் இதையா கற்று கொடுக்குறீங்க? உடற்பயிற்சி ஆசிரியர் போக்சோவில் கைது!

சார் இதையா கற்று கொடுக்குறீங்க? உடற்பயிற்சி ஆசிரியர் போக்சோவில் கைது!

 ஜி.சாந்தகுமார்,

 உடற்பயிற்சி சொல்லிக்கொடுக்க சொன்னா! பலான மேட்டரை கற்றுக் கொடுத்திருக்கிறார் ஒரு ஆசிரியர். இதனால் அவர் போக்சோ சட்டத்தின்கீழ் கைது செய்யப்பட்டார்.

 அந்த ஆசிரியரின் பெயர் ஆல்பின் பிரேம்குமார், அவர்  சென்னை வியாசர்பாடி கொடுங்கையூர் பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் பணியாற்றுகிறார். அதே பள்ளியில்  ஒன்பதாம் வகுப்பு படித்து வரும் மாணவி ஒருவர், திடீரென்று வலிப்பு நோய்க்கான மாத்திரைகளை சாப்பிட்டு மயங்கினார். இதைப் பார்த்த சகமாணவியரும், ஆசிரியர்களும்  அவளது பெற்றோருக்கு தகவல் தந்தனர். பின்னர், சிறுமியை மீட்டு சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.

 இது குறித்து மாணவிய் இடம் நட்டத்தப்பட்ட விசாரணையில், தனது பள்ளியின் உடற்பயிற்சி ஆசிரியர் ஆல்பின் பிரேம்குமார் (26) என்பவர் தனக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக மாணவி அழுதபடியே கூறியிருக்கிறார். அதிர்ச்சி அடைந்த பெற்றோர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் ஆசிரியர் மீது இது குறித்து புகார் அளித்தனர்.

 அதன் பின்னர் வழக்குப்பதிவு செய்த போலீஸார், வியாசர்பாடி சென்பால் தெருவைச் சேர்ந்த உடற்பயிற்சி ஆசிரியர் ஆல்பின் பிரேம்குமாரை(26) கைது செய்தனர். அவர், கடந்த சில மாதங்களாகவே சிறுமியுடன் செல்போனில், காதலிப்பதாக கூறி ஆசை வார்த்தைகள் பேசி, பள்ளியில் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டது போலீஸார் விசாரணையில் தெரிய வந்துள்ளது.

 அதன் பின்னர், எம்.கே.பி. நகர் அனைத்து மகளிர் காவல் நிலைய போலீஸார், போக்சோ வழக்கில் ஆல்பின் பிரேம்குமாரை கைது செய்து சிறைக்கு அனுப்பிவைத்தனர்.