எனக்கு இது கடைசி தேர்தலாக இருக்கலாம்...வாய்பளிங்கள்..ஏ.சி.சண்முகம் உருக்கம்!

 ஜி.கே.சேகரன்,

 இது எனக்கு கடைசி தேர்தலாக இருக்கலாம், ஆகவே இமுறை வாய்ப்பளியுங்கள் என புதிய நீதிக்கட்சியின் தலைவர் ஏ.சி.சண்முகம் பாமக செயல் வீரர்கள் கூட்டத்தில் உருக்கமாக பேசினார்.

 வேலூர்மாவட்டம், சத்துவாச்சாரியில் உள்ள வேலூர் கிழக்கு மாவட்ட பாமக அலுவலகத்தில் அக்கட்சியின்  கிழக்கு மாவட்ட செயலாளர் கே.எல்.இளவழகன் தலைமையில் செயல் வீரர்கள் கூட்டம் நடந்தது. இதில் மாநில துணை தலைவர் என்.டி.சண்முகம், மாவட்ட துணை தலைவர் சம்பத், மாவட்டத்தலைவர் வெங்கடேசன் உள்ளிட்ட திரளான பாமகவினர் பங்கேற்றனர்.

  தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் வேலூர் தொகுதியில் போட்டியிடும் புதிய நீதிக்கட்சியின் தலைவர் ஏ.சி.சண்முகம் பங்கேற்றார்.

 அப்போது அவர் கூறியதாவது:-

   கடந்த இரண்டு முறையும் பாமக பாஜக கூட்டணியில் போட்டியிட்டு தோல்வியை தழுவினேன். இருப்பினும் சமூக நீதி காவலர் மருத்துவர் ராமதாஸ் மற்றும் அன்புமணி ராமதாஸ் ஆகியோர்களின் ஆதரவோடு இந்த தேர்தலில் மீண்டும் வேலூர் பாராளுமன்ற தொகுதியில் போட்டியிடுகிறேன்.

  இங்கு நான் ஏற்கனவே தோல்வி அடைந்திருந்தாலும் மக்களுக்காக மருத்துவ முகாம்கள் வேலைவாய்ப்பு முகாம்கள் நடத்தியுள்ளேன். ஆயிரக்கணக்கான மக்கள் பயனடைந்துள்ளனர்.  என்னை வெற்றி பெற செய்யுங்கள். இந்த தேர்தல் எனக்கு கடைசி தேர்தலாக இருக்கலாம் என ஏ.சி.சண்முகம் உருக்கமாக பேசினார்.