பாலியல் பலாத்காரத்தை தவிர்க்கனும்...இல்லைன்னா அனுபவிக்கனும்!?அடாவடி பேச்சுக்கு சாரி கேட்ட எம்.எல்.ஏ.!

பாலியல் பலாத்காரத்தை தவிர்க்கனும்...இல்லைன்னா அனுபவிக்கனும்!?அடாவடி பேச்சுக்கு சாரி கேட்ட எம்.எல்.ஏ.!

ச.செல்வராஜ்,

 பாலியல் பலாத்காரத்தை தவிர்க்க முடியவில்லைன்னா? அதை அனுபவிக்க வேண்டும் என்று கர்நாடக எம்.எல்.ஏ கே.ஆர். ரமேஷ் குமார் சட்டப்பேரவையில் அடாவடியாக பேசியிருக்கிறார். இதற்கு எதிர்ப்பு வலுக்கவே அவர் சாரி கோரியிருக்கிறார்.

 கர்நாடக சட்டப்பேரவையில் பல்வேறு விவகாரங்கள் குறித்து விவாதம் நடைபெற்றது. அவையில் அதற்கு எதிர்ப்பு கிளம்பியது.

  உடனடியாக இருக்கையில் அமரும்படி கூறிய சபாநாயகர் விஷ்வாஷ்வார் ஹெக்டே கார்கி, 'உங்களை என்னால் கட்டுப்படுத்த முடியவில்லை. இந்த சூழ்நிலையை  அனுபவிப்போம் என்பதுபோல்  உணர்கிறேன். இதற்கு மேல் என்னால் இந்த சபையை முன்னோக்கி நடத்திச் செல்ல முடியவில்லை.' எனக் கூறினார்.

  அப்போது குறுக்கிட்ட முன்னாள் சபாநாயகரும், காங்கிரஸ் எம்.எல்.ஏ.வுமான ரமேஷ் குமார், 'பாலியல் பலாத்காரத்தை தவிர்க்க முடியவில்லை என்றால் படுத்துக்கொண்டு அதை அனுபவிக்க வேண்டும் என்று பழமொழி உள்ளது. அதுபோல இருக்கிறது உங்கள் நிலைமை' என்று கூறினார்.

 அவரது இந்த அடாவடி பேச்சு சர்ச்சையானது. அவர் தனது பேச்சுக்கு மன்னிப்பு கேட்க வேண்டும் என அவரது கட்சி உறுப்பினர்கள் உட்பட அனைத்து கட்சியினரும் கண்டனம் தெரிவித்தனர்.

 அதனைத்தொடர்ந்து எம்.எல்.ஏ. ரமேஷ் குமார் தனது ட்விட்டர் பக்கத்தில், ' பாலியல் பலாத்காரம் குறித்த எனது வார்த்தைகளுக்கு நான் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன். இனி கவனமாக பேசுவேன்' என கூறி சாரி கேட்டிருக்கிறார்.