ஆக்கிரமிப்பை அகற்ற வந்த அதிகாரிகளை விரட்டிய குடியிருப்பு வாசிகள்!

  கு.அசோக்,

   நீர் நிலை ஆக்கிரமிப்பு ஜேசிபி மூலம் இடித்து அகற்றம் - மக்கள் ஆக்கிரமிப்பை அகற்ற கூடாது என போராட்டம் தள்ளுமுள்ளு பணியை கைவிட்டு கலைந்து சென்ற அதிகாரிகள்.

 வேலூர் மாவட்டம், வேலூர் மாநகராட்சியின் மையப்பகுதியில் அமைந்துள்ள கன்சால்பேட்டை பகுதியில் சுமார்  46  குடும்பங்கள் வீடு கட்டி வசித்து வருகின்றனர். அந்த இடம் நீர் நிலை புறம்போக்கு என்பதால்  அப்பகுதி மக்களை அங்கிருந்து காலி செய்துவிட்டு செல்லும்படி அவர்களுக்கு பல முறை அறிவுறுத்தி இருந்தும் அவர்கள் காலி செய்யாமல் அங்கேயே தொடர்ந்து வசித்து வந்தனர்.

  நீர்வரத்து கால்வாய்களின் ஆக்கிரமிப்புகளை உடனடியாக அப்புறப்படுத்த வேண்டும் என்று நீதிமன்றம் அறிவுறுத்தலின்படியும் தற்போது அப்பகுதியை ஒட்டி ரயில்வே மேம்பாலம் வர இருப்பதாலும் அந்த இடத்தை காலி செய்ய வேண்டும் என்று அப்பகுதிவாசிகளுக்கு கடந்த மாதமே  நோட்டீஸ் அளிக்கப்பட்டு இருந்தது.

  ஆனாலும் தொடர்ந்து அவர்கள் காலி செய்யாமல் அதே இடத்தில் வசித்து வந்ததால் இன்று மாநகராட்சி அதிகாரிகள் ஜேசிபி இயந்திரங்களோடு ஆக்கிரமிப்புகளை அகற்றுவதற்காக அப்பகுதியில் குவிந்தனர்.

  எந்த அசம்பாவிதங்களும் ஏற்படாமல் இருக்க அதிரடிப்படை போலீசார் வரவழைக்கப்பட்டனர்.

ஆனாலும் ஆக்கிரமிப்பாளர்கள் அந்த இடத்தை காலி செய்ய மறுத்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் காவல்துறைக்கும் பொதுமக்களுக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது பின்னர் மக்கள் எதிர்ப்பை அடுத்து ஆக்கிரமிப்பு அகற்றும் பணியை கைவிட்ட அதிகாரிகள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.