40 ஆண்டுகள் போலி மருத்துவம் செய்தவர் கைது!

40 ஆண்டுகள் போலி மருத்துவம் செய்தவர் கைது!

கு.அசோக்,
மருத்துவம் தொடர்பாக எந்த படிப்பும் படிக்காத ஒருவர், கடந்த 40 வருடங்களுக்கு மேலாக பொது மக்களுக்கு ஆங்கில மருத்துவம் பார்த்து வந்த நிலையில் அவர் கைது செய்யப்பட்டார்.

ராணிப்பேட்டை மாவட்டம், ஒழுகூர் கிராமத்தில் மருத்துவம் படிக்காமலேயே வீட்டில் கிளினிக் வைத்து கிராம பொதுமக்களுக்கு மருத்துவம் பார்த்து வருவதாக  வாலாஜாபேட்டை அரசு மருத்துவ குழுவினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

 அதன் பேரில் வாலாஜா  அரசு மருத்துவமனை மருத்துவர் தினேஷ் பாபு தலைமையிலான மருத்துவ குழு மற்றும் காவல்துறை ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று அங்கு விசாரணை மேற்கொண்டனர். 

 அந்த கிராமத்தில் பிராமணர் பகுதியில் வெறும் பனிரெண்டாம் வகுப்பு வரை மட்டுமே படித்துவிட்டு 40 வருட காலமாக வீட்டிலேயே மருத்துவம் பார்த்து வந்த 72 வயதான ஜெயவேல் என்ற முதியவர் சிக்கினார். 

பின்னர் அவரை போலீசார் கைது செய்ததோடு அவர் பயன்படுத்தி வந்த மருந்துகள் அனைத்தும் பறிமுதல் செய்தனர்.