தண்ணீர் தாகத்தால் குளத்தில் விழுந்த பசு!

தண்ணீர் தாகத்தால் குளத்தில் விழுந்த பசு!

 கு.அசோக்,

 அம்மூர் அருகே கோவில் குளத்தில் விழுந்த பசு மாட்டை பல மணி நேரம் போராடி உயிருடன் மீட்ட தீயணைப்பு வீரர்கள் மற்றும் பொதுமக்கள்

 ராணிப்பேட்டை மாவட்டம் அம்மூர் பேருந்து நிலையம் அருகே உள்ள அருள்மிகு ஸ்ரீ கங்கை அம்மன் திருக்கோவிலுக்கு சொந்தமான குளத்தில் அதே பகுதியை சேர்ந்த சுரேஷ் என்பவருடைய பசு மாடு ஒன்று எதிர்பாராத விதமாக தவறி விழுந்துள்ளது. தண்ணீர் தாகத்தை தணிக்க குளத்துக்கு சென்ற போது இந்த விபத்து ஏற்பட்டது.

 இதனை பார்த்த அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் குளத்தில் சென்று நீண்ட நேரம் போராடியும் பசுமாட்டினை மீட்க முயன்றனர்.

 ஆனால் அவர்களால் மீட்க்க முடியவில்லை. பின்னர் இதுகுறித்து ராணிப்பேட்டை தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்ததின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள், அப்பகுதி மக்களின் உதவியோடு பசுமாட்டை உயிருடன் மீட்டு வெளியே கொண்டு வந்தனர்.