அதிகாரி சார்ஸ்..இந்த சாலையில் விளக்கும் அம்பேலுங்க! கொஞ்சம் கவனியுங்க ப்ளீஸ்!!

அதிகாரி சார்ஸ்..இந்த சாலையில் விளக்கும் அம்பேலுங்க! கொஞ்சம் கவனியுங்க ப்ளீஸ்!!

கு.அசோக்,

 வாலாஜா டு  சோளிங்கர் செல்லும் சாலை கடந்த சில நாட்கக இருளில் மூழ்கியிருக்கிறது.

  குற்ற செயல்கள் மற்றும் விபத்துக்கள்  நடைபெறுவதற்கு முன் நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுமென அப்பகுதியை சேர்ந்த மக்கள் கோரிக்கை முன் வைத்திருக்கின்றனர்.

 இராணிப்பேட்டை மாவட்டம், வாலாஜாவில் இருந்து சோளிங்கர் செல்லும் சாலையில் இருபுறமும் உள்ள நகராட்சி நிர்வாகத்தின் சார்பாக போடப்பட்ட மின் விளக்குகள் கடந்த சில நாட்கள் மேலாக எறியாமல் இருள் சூழ்ந்து காணப்பட்டு வருகிறது.

 இப்பகுதியில் காவலர் குடியிருப்பு, ஊராட்சி ஒன்றிய அலுவலகம்வட்டார கல்வி அலுவலகம் மற்றும் பிரசித்தி பெற்ற ஆலயங்கள் இருப்பதாலும் 108 திவ்ய தேசங்களின் ஒன்றான சோளிங்கர் ஸ்ரீ யோக நரசிம்ம சுவாமி கோவிலுக்கு செல்லும் பிரதான சாலை என்பதாலும்  பொதுமக்களின் நடமாட்டம் மிகுந்த பகுதியாக காணப்படுகிறது.

  இந்த நிலையில் தான் கடந்த சில நாட்களாக அப்பகுதி முழுவதும் மின்விளக்குகள் எரியவில்லை.

  இப்பகுதியை கடந்து செல்ல உள்ளூர் மக்களே அச்சமடைந்து வருகின்றன அதேபோல் சாலையின் இருபுறமும் வெளிச்சம் இல்லாததால் எதிரெதிரே வரும் வாகனங்கள் ஒன்றுக்கொன்று மோதிக்கொண்டு மிகப்பெரிய விபத்துக்கள் ஏற்படும் வாய்ப்புள்ளதாக தெரிகிறது.

  ஆகையால் இது போன்ற சம்பவங்கள் நடைபெறாமல் இருக்க வேண்டுமென்றால் நகராட்சி நிர்வாகம் துரிதமாக செயல்பட்டு எரியாமல் இருக்கும் மின் விளக்குகளை சரி செய்து தர வேண்டுமென அப்பகுதி மக்கள் கோரிக்கையாகவே தெரிவிக்கின்றனர்.

  ஓ...மக்கள் அவஸ்த்தைபடுகிறார்களா? அப்படின்னா அதிகாரிகள் சசி செஞ்சிடுவானுங்க.