நீட் தேர்வை ரத்து செய்யும் மசோதாவுக்கு குடியரசுத் தலைவர் ஒப்புதல் அளிக்க வேண்டும்! பாமக தலைவர் அன்புமணி பேட்டி!

நீட் தேர்வை ரத்து செய்யும் மசோதாவுக்கு குடியரசுத் தலைவர் ஒப்புதல் அளிக்க வேண்டும்! பாமக தலைவர் அன்புமணி பேட்டி!

 ஜி.கே.சேகரன், 

 நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என்கிற தமிழகத்தின் மசோதாவை குடியரசுத் தலைவர் ஒப்புதல் அளிக்க வேண்டும் என பாட்டாளி மக்கள் கட்சி தலைவர் அன்புமணி ராமதாஸ் கோரிக்கை வைத்தார். நீட் தேர்வை முன் வைத்து பல லட்சம் கோடி ரூபாவை நீட் மையங்கள் சம்பாதிப்பதாகவும், ஆகையால் தரமற்ற மருத்துவர்கள் பணிக்கு வருவார்கள், இந்தியா முழுவதும் நீட் தேர்வு ரத்து செய்ய வேண்டும் என அன்புமணி ராமதாஸ் அரக்கோணத்தில் பேட்டியின் போது சொன்னார்.

  இராணிப்பேட்டை மாவட்டம், அரக்கோணம் அடுத்த தக்கோலம் பகுதியில் தனியார் திருமண மண்டபத்தில் முன்னாள் மாவட்ட செயலாளர் சண்முகம் மகனான மணி என்கின்ற அன்புமணி மற்றும் சத்யா ஆகியோரின் திருமணத்தை பாட்டாளி மக்கள் கட்சி தலைவரும் அன்புமணி ராமதாஸ்  திருமணத்தை நடத்தி வைத்தார் ¢ அவருடன் பசுமைதாயகம் தலைவர் சௌமியா அன்புமணியும் வந்திருந்து மணமக்களை வாழ்த்தினார்.

  இந்த திருமண விழாவில் பாமக நிர்வாகிகள் சரவணன்,கிருஷ்ணன்,இளவழகன்,சக்கரவர்த்தி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

 பின்னர் செய்தியாளர்களை சந்தித்த பாட்டாளி மக்கள் கட்சி தலைவர் அன்புமணி ராமதாஸ் கூறுகையில், விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் போட்டியிடக் கூடிய வேட்பாளர் ஏற்கனவே போட்டியிட்டவர் மண்ணின் மைந்தர். ஆகையால் அவர் இந்த இடைத்தேர்தலில் 100% வெற்றி பெறுவார். அதிமுக தேமுதிக போட்டியிடாவிட்டாலும் அது எங்களது சொந்த மண் என்பதால் அதில் வெற்றி நிச்சயம்.

  தமிழகத்தில் போதை கலாச்சாரம் தலை தூக்கி உள்ளதால் பள்ளி மாணவர்கள் மற்றும் கல்லூரி மாணவர்கள் பாதிக்கப்படுகிறார்கள்.  இதை கட்டுப்படுத்த தமிழக முதல்வர் அதிரடி நடவடிக்கை எடுக்க வேண்டும்.  மேலும் 2026 ஆம் ஆண்டு நடைபெறக்கூடிய சட்டமன்றத் தேர்தலில் திமுக அதிமுக இல்லாத புதிய கூட்டணி கட்சி ஆட்சி அமைக்கும்.

  உள்ளாட்சித் தேர்தல் கூட்டணி முடிவுகள் பின்னர் அறிவிக்கப்படும், நீட் தேர்வு நடத்தினால் தரமான மருத்துவர்கள் வரலாம் என ஒன்றிய அரசு அப்போது திட்டமிட்டது. அதற்கு அமைச்சராக இருக்கும்போது நான் எதிர்ப்பு தெரிவித்தவன். மேலும் நீட் தேர்வு வைத்து நீட் தேர்வை பயிற்சி மையங்கள் கோடிக்கணக்கில் பணம் சம்பாதிக்கின்றனர்.  இதனால் தரமான மருத்துவர்கள் வர மாட்டார்கள்.

 ஏழை மாணவர்கள் நீட் தேர்வு வெற்றி பெற்றாலும் அவர்கள் மருத்துவ மையங்கள் சென்று படிக்க முடியாத சூழ்நிலை ஏற்படுகிறது.  தமிழகத்திலிருந்து ஆளுநர் அனுப்பிய மசோதாவிற்கு குடியரசுத் தலைவர் ஒப்புதல் வழங்க வலியுறுத்துவோம். மருத்துவர் என்ற முறையில் கூறுகிறேன் இந்தியா முழுவதுமே நீட் தேர்வு தேவையில்லாத ஒன்று.

 வன்னியர்களுக்கு 10.5% இட ஒதுக்கீடு வழங்க ஆணை பிறப்பித்திருந்தும், கடந்த இரண்டு ஆண்டுகளாக காலத்தாமப்படுத்துகிறது அரசு. ஆகவே தமிழக அரசு வன்னியருக்கு இட ஒதுக்கீடு வழங்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழக முதலமைச்சருக்கு வலியுறுத்துவதாக அன்புமணி ராமதாஸ் சொன்னார்.