பக்ரீத் பண்டிகையின் சிறப்புத்தொழுகை!
ஜி கே சேகரன்,
ஈகை திருநாளாம் பக்ரீத் திருநாளை முன்னிட்டு வேலூரில் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட இஸ்லாமியர்கள் சிறப்பு தொழுகையில் ஈடுபட்டனர்
______________
வேலூர்மாவட்டம்,வேலூர் ஆர்.என்.பாளையத்தில் உள்ள ஈத்கா மைதானத்தில் இன்று ஈகை திருநாளாம் பக்ரீத் திருநாளை முன்னிட்டு இஸ்லாமிய மக்கள் சுமார் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் தொழுகை செய்து பின்னர் ஒருவருக்கொருவர் வாழ்த்துகளை கூறி மகிழ்ந்தனர்.
ஈகை திருநாளான இன்று குர்பானி கொடுத்து உணவுகளை ஏழைகளுக்கு வழங்குவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது இதே போன்று பள்ளிகொண்டா,பேர்ணாம்பட்டு ,குடியாத்தம் ஆகிய பகுதிகளிலும் பக்ரீத் சிறப்பு தொழுகை நடைபெற்றது
பின்னர் ஒருவரை ஒருவர் கட்டிதழுவி வாழ்த்துக்களையும் தெரிவித்துகொண்டனர்
பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு வாணியம்பாடி காதர்பேட்டை ஈத்கா மைதானத்தில் சிறப்பு தொழுகை நடைபெற்றது. இதில் ஆயிரக்கணக்கான இஸ்லாமியர்கள் கலந்துக் கொண்டனர்.
அ.பிலால்.
அதேபோல் திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி காதர்பேட்டை ஈத்கா மைதானத்தில் தியகத் திருநாளை
முன்னிட்டு சிறப்பு தொழுகை நடைபெற்றது.
இதில் ஆயிரக்கணக்கான இஸ்லாமியர்கள் ஒன்று கூடி சிறப்பு தொழுகை நடத்தினர். தொழுகை முடிந்து பின்னர் ஒருவருக்கு ஒருவர் கட்டி தழுவி தியாக திருநாள் நல்வாழ்த்துகளை தெரிவித்துக் கொண்டனர்.
இதனை தொடர்ந்து இசுலாமிய செல்வந்தர்கள் மூன்று நாட்களுக்கு ஆடு,மாடுகளை குர்பானி செய்து கடமைகளை நிறைவேற்ற உள்ளனர்.
மேலும் இராணிப்பேட்டை பகுதிகளில் சிறப்பு தொழுகைகள் நடத்தப்பட்டது.