நாடாளுமன்றத்தில் இல்லாத திமுக எம்பியும் சஸ்பெண்டு! திரும்பப்பெற்ற சபாநாயகர்!

ம.பா.கெஜராஜ்,
நாடாளுமன்றத்தின் மக்களவையில் கலர் புகை குண்டுகளை வீசிய சம்பவத்தில் ஈடுபட்ட 4 பேரை காவலில் எடுத்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். பாதுகாப்பு குறைபாடு தொடர்பாக மத்திய உள்துறை அமைச்சர் விளக்கம் அளிக்க வேண்டும் எனவும் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் எபவும் கூச்சலிட்டனர்.
ஆகவே மக்களவையில் அமளியில் ஈடுபட்ட 13 எம்.பி.க்கள் மீது சபாநாயகர் சஸ்பெண்ட் நடவடிக்கை எடுத்தார்.
சஸ்பெண்ட் செய்யப்பட்ட அனைவரும் இந்த குளிர்கால தொடரில் மீதமுள்ள நாட்களில் பங்கேற்க இயலாது.
இப்படி சபாநாயகர் சஸ்பெண்ட் செய்யப்பட்ட எம்.பி.க்கள் பட்டியலில் திமுக எம்.பி. எஸ்.ஆர். பார்த்திபன் பெயரும் இடம் பெற்றிருந்தது. நேற்று மக்களவை நடைபெற்றபோது பார்த்திபன் கலந்து கொள்ளவில்லை. அவர் டெல்லியிலே இல்லையாம்.
மக்களவையில் கலந்து கொள்ளாத எம்.பி. மீது சஸ்பெண்ட் நடவடிக்கையா? என குழப்பம் நிலவியது. பின்னர், தவறாக அடையாளம் காணப்பட்டதாக தெரிவிக்கப்பட்டு, அவர் மீதான சஸ்பெண்ட் நடவடிக்கையை சபாநாயகர் திரும்பப்பெற்றார்.
இதனால் சிறிது நேரம் நிலவிய குழப்பம் முடிவுக்கு வந்தது. இதுகுறித்து ஜோஷி கூறுகைளில் "நான் தவறுதலாக அடையாளம் கண்டும் சபாநாயகருக்கு எம்.பி.யின் பெயரை தெரிவித்து வேண்டுகோள் விடுத்துவிட்டேன்" எனத் சொன்னார்.