பா.ஜ.க. எம்.பி எப்படி பாஸ் கொடுத்தார்? காயத்ரி ரகுராம் கேள்வி?

பா.ஜ.க. எம்.பி எப்படி பாஸ் கொடுத்தார்? காயத்ரி ரகுராம் கேள்வி?

 டி.இர்பான் முகமது,

  நாடாளுமன்றத்தின்  மக்களவைக்குள் பார்வையாளர்களாக நுழைந்த இருவர் கண்ணிர் குண்டை வீசி தாக்குதலில் ஈடுபட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில் பாஜக எம்பி பிரதாப் சிம்ஹா அவர்களுக்கு பாஸ் வழங்கியது ஏன் என காயத்ரி ரகுராமன் கேள்வியெழுப்பியிருக்கிறார்.

   தமிழக பாஜக முன்னாள் நிர்வாகியான காயத்ரி ரகுராம் இந்த சம்பவம் குறித்து சமூக வலைதள பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ளார்.

அதில் ராஜ்பவன் பெட்ரோல் குண்டு வினோத் போல, போலி எம். எஸ். எம். இ.  அமைப்பு மோசடி முத்துராமன் போல, இன்று புதிய நாடாளுமன்றத்தில் மஞ்சள் வாயு தாக்கியவர்களுக்கு ஒரு பா.ஜ.க வழக்கறிஞர் ஜாமீன் கோரி வக்காலத்து வாங்கினால் நான் ஆச்சரியப்பட மாட்டேன் எனதெரிவித்துள்ள அவர்,

பாஜக எம்பி பிரதாப் சிம்ஹா இவர்களை உள்ளே அனுமதித்தது ஏன்? என்றும் காயத்ரி ரகுராம் கேள்வி எழுப்பியுள்ளார்.