புதிய நீர்நிலைகளை உருவாக்க மக்கள் எதிர்ப்பு தெரிவிப்பதாக துரைமுருகன் பேட்டி!

புதிய நீர்நிலைகளை உருவாக்க மக்கள் எதிர்ப்பு தெரிவிப்பதாக துரைமுருகன் பேட்டி!

 ஜி.கே.சேகரன்,

 சென்னை பகுதியில் இரண்டு புதிய நீர்நிலைகளை உருவாக்க மக்கள் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்ததால் பணிகள் தடைபடுகிறது ஏற்கனவே உள்ள செம்பரம்பாக்கம் பூண்டி உள்ளிட்ட ஏரிகளின் உயரத்தை ஒரு அடி உயர்த்த திட்டமிட்டுள்ளோம் தமிழக நீர் வளத்துறை அமைச்சர் துரைமுருகன் பேட்டி

 வேலூர்மாவட்டம், அம்முண்டியில் வேலூர் கூட்டுறவு சர்க்கரை ஆலை உள்ளது இதன் கரும்பு அரவை துவக்க விழா மாவட்ட ஆட்சியர் பெ.குமாரவேல் பாண்டியன் தலைமையில் நடந்தது.  இதில் தமிழக நீர் வளத்துறை அமைச்சர் துரைமுருகன், கைத்தறி துறை அமைச்சர் காந்தி ஆகியோர் கரும்பு அரவையை துவங்கினார்கள்.

 இதில் கூட்டுறவு சர்க்கரை ஆலை இணை பதிவாளர் நர்மதா மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்டோரும், திரளான விவசாயிகள் பொதுமக்களும் தொழிலாளிகளும் கலந்துகொண்டனர்

   பின்னர் நீர் வளத்துறை அமைச்சர் துரைமுருகன் செய்தியாளர்களிடம் கூறுகையில் கவர்னர் முதல்வரை பேச்சுவார்த்தைக்கு அழைத்தாரா இல்லையா என எனக்கு தெரியாது. சென்னை சென்ற பின்னர் தான் தெரிய வரும் நீண்டகாலமாக நீர் நிலையை உருவாக்க தேடி வருகிறோம்.

  சென்னையில் ராமன் சேரியில் பெரிய டேம் கட்டலாம், ஆனால் ஊர் மக்கள் அங்கு அளக்க சென்றால் எதிர்ப்பு தெரிவிக்கின்றனா.¢ ஆகவே பூண்டி மற்றும் செம்பரம்பாக்கம் ஏரியின் கொள்ளவை ஒரு அடி உயர்த்த உள்ளோம்.  நீதிமன்ற உத்தரவுக்கு பின்னர் அதிக நீர் நிலை ஆக்கிரமிப்புகளை அகற்றியுள்ளோம் ஆனால் அங்கு இருக்கும் மக்கள் அகற்றவிடாமல் தடுக்கின்றனா.

 அவர்களுக்கு வேறு இடம் வழங்காமல் அவர்களை எப்படி காலி செய்ய முடியும்? அரசியல் தலையீடும் உள்ளது. ஊர் மக்கள் தலையீட்டாலும் ஆக்கிரமிப்பை அகற்ற முடியவில்லை.

நாடாளுமன்றத்தில் நேற்று இருவர் அத்துமீறி துனிந்து குதித்துள்ளான் உள்ளே எப்படி புகை குண்டை கொண்டு சென்றான் என தெரியவில்லை.

 6 ஆயிரம் புயல் நிவாரணம் தகுதி பார்த்து கொடுப்பதாக எடப்பாடி சொல்வது குறித்து கேட்டதற்கு அவர் எதையாவது சொல்வார் என சொன்னார்.